மருத்துவர் தேர்வில், "சர்க்கரை நோய்க்கு என்ன மருந்து?" என்ற கேள்விக்கு "Glimepride " என்று எழுதும் மருத்துவ மாணவர், டாக்டராகி தன்னுடைய சர்க்கரை நோயாளியின் மருந்து சீட்டில் "Amaryl " என்று எழுதுகிறார்..இதில் விஷயம் என்னவென்றால், "க்ளிமேப்ரிடே" என்ற இந்த மருந்து சர்க்கரை நோய்க்கு கொடுக்கப்படும் ஒரு உப்பு. பத்து மாத்திரை கொண்ட ஒரு பட்டியின் விலை ரூ 2 . ஆனால் "Amaryl " என்ற கம்பெனி பிரண்டு பெயரில் வரும் இதே மருந்தின் விலை ரூ.125. "Cetrizine" எனப்படும் ஒரு மருந்து சாதாரண ஜலதோஷத்துக்கு தரப்படுவது. இதன் விலை பத்துக்கு ரூ.1.20 . ஆனால் "Cetzine" என்ற பெயரில் இது ரூ.35 க்கு விற்க்கபடுகிறது. டாக்டர் அதைத்தான் எழுதுகிறார்.ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் “streptokinase” அல்லது “urokinase” என்ற மாரடைப்புக்கான ஊசி, மார்க்கெட்டில் பிரண்டு செய்யப்பட்டு ஐயாயிரத்துக்கு விற்கபடுகிறது. ...
ஏழைகள் எப்படி இந்த மருந்துகளை வாங்க முடியும்..டாக்டர்கள் மருந்துகளின் பொது பெயரை எழுதி பழக வேண்டும்? இது அமீர்கான் தன்னுடைய column ஒன்றில் ஹிந்துவில் எழுதியது... மொழிபெயர்த்திருக்கிறேன்.
No comments:
Post a Comment