Sunday, October 21, 2012

உழவு பழக ஆசையா உதவுகிறார் வேளாண் ஞானி திரு நம்மாழ்வார் அவர்கள்



பசுமை தோழர்களே வணக்கம் கரூர் மாவட்டம் கடவூர் அருகில் சுருமான்பட்டியில் 55 ஏக்கர் பரப்பளவில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த எழில்கொஞ்சும் இடம் தான் ஐயா நம்மாழ்வார் அவர்களின் உயிர் சூழல் நடுவம் அறகட்டளைக்கு சொந்தமான "வானகம் "
நவம்பர் 3 மற்றும் 4 (சனி,ஞாயிறு ) தேதிகளில் வேளாண் சார்ந்த கலைகளான உழவு ஒட்டுதல் ,கலப்பை பூட்டுதல் மற்றும் இயற...
்க்கை வாழ்வியல் ,இயற்க்கை வழி வேளாண்மை போன்ற துறைகளில் உங்களுக்கு உள்ள அச்சங்களையும் சந்தேகங்களையும் ஐயா நம்மாழ்வார் அவர்கள் நேரடியாக பதில் சொல்கிறார் ,வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல் நிலத்தில் இறங்கி வேலை செய்யும் கள பயிற்சியும் உண்டு .

மரபு வழி வேளாண்மையை மீட்டு எடுக்கும் மண்வெட்டி ஐயா நம்மாழ்வார் அவர்களோடு இணைந்து பணியாற்று ஓர் இனிய வாய்ப்பு .
.

குறிப்பு :
1)அங்கு aitel மற்றும் aircel tower கிடைக்காது
2)காலை 9 .30 குள் வானகம் வந்து சேர முயற்சி செய்யுங்கள்
3)சிறுதானியங்கள் மற்றும் விதைகள் அங்கு கிடைக்கும்
4)ஐ யா நம்மாழ்வார் அவர்களின் புத்தகங்கள் மற்றும் cd கள் கிடைக்கும்
5)அக்டோபர் 25 குள் முன்பதிவு செய்யுங்கள்

வானகம் :
திண்டுக்கலில் இருந்து காலை 6 .15 மற்றும் 8 .15 இக்கு பாலவிடுதி செல்லும் பேருந்து கிளம்பும் ,அதில் ஏறி கடவூரில் இறங்கி கொள்ளவும் ,கடவூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 1km தொலைவில் வானகம் அமைந்துள்ளது(கடவூரில் இருந்து நடந்து வந்து விடலாம் )

கட்டணம் :
கட்டணம் எதுவும் அவர்கள் குறிப்பிடவில்லை இருப்பினும் இரண்டு நாட்கள் நமக்கு உணவு மற்றும் தங்கும் வசதி செய்து தருவதால் நம்மால் இயன்ற சிறு தொகையை நமக்குள் திரட்டி கொடுப்போம்

மேலும் விவரங்களுக்கும் முன்பதிவிற்க்கும்
ராஜ்மோகன் 9894462698

No comments:

Post a Comment