Monday, October 29, 2012

தஞ்சாவூர் : ராஜராஜசோழன் சதய விழாவில்

தஞ்சாவூர் : தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்று வரும் ராஜராஜசோழன் சதய விழாவில் ஏராளமானோர் பங்கேற்று அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்தில் பிறந்ததார். இதனை ஆண்டுதோறும் இரண்டுநாட்கள் விழா எடுத்து கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டிற்கான 1027-வது சதய விழா பெரியகோவில் வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் விழாவைத் தொடங்கிவைத்தார்.
விழாவின் முதன்நாளன்று கருத்தரங்கம், மங்கள இசை, திருமுறை இசைத்தல், இன்னிசைப்பாடல்கள், திருமுறை இன்னிசை அரங்கம், நாத இசை சங்கமம், கவியரங்கம், பக்தி இன்னிசை பாட்டு மன்றம், நாட்டியம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பெருஉடையாருக்கு பேரபிஷேகம்
வியாழக்கிழமையன்று காலை மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, திருமுறை ஓதுவார் திருமுறை பண்ணுடன் திருமுறை திருவீதிஉலா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பெருவுடையார் பெரியநாயகி திருமேனிகளுக்கு பேரபிஷேகம் நடைபெற்றது.
47 வகையான பொருட்களைக்கொண்டு மூன்றுமணிநேரம் நடைபெற்ற இந்த அபிஷேகத்தை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர். அப்போது பேசிய பக்தர்கள், தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த மாமன்னர் ராஜராஜனின் சிலையை பெரிய கோவிலில் நிறுவவேண்டும் என்றும் தமிழ்ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நீர் மேலாண்மை, குடவோலைமுறை தேர்வு, நிலமேலாண்மை என பல்வேறு நிர்வாகத்திறன்களில் சிறந்து விளங்கி ராஜகேசரி என்ற உரிய பட்டத்தை பெற்றார். மேலும் எதிர்கால சந்ததியினருக்கு தனது நிர்வாகத்திறனையும், கோவில் கட்டுமான பணிகளின் விவரங்களையும் கல்வெட்டாக எழுதி வைத்து சென்றிருக்கும் மாமன்னது சிறப்புகளை இளைய சமூகத்தினருக்கு எடுத்து கூறும் முகமாக இந்த சதய விழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment