Thursday, June 26, 2014

காமராஜர்-ஒரு சகாப்தம்

முதல்வராக இருந்த போதும் அன்னையே கேட்டபோதும் 
முப்பது ரூபாய் கூடுதலாகத்தர மறுத்தாய் அன்று

வட்டச் செயலாளர்கள் கூட வாரிசுகளுக்கு 
வளைத்துப் போடுகின்றனர் சொத்துகளை இன்று

இலவசக் கல்வி வழங்கிட அரசுப்பள்ளிகளை 
எங்கும் தாராளமாகத்திறந்து வைத்தாய் அன்று

அரசுப்பள்ளிகளை மூடி தனியார் பள்ளிகள் 
அளவின்றி தாராளக் கொள்ளைக்கு வழிவகுத்தனர் இன்று

வெள்ளையனே வெளியேறு என்று வீரகோசமிட்டு 
வாள் ஏந்தி போராடி வரலாறு படைத்தாய் அன்று

வெள்ளையனே வருக கொள்ளையடித்துச் செல்க 
விரிக்கின்றனர் ரத்தினக்கம்பளம் இன்று

விவசாயத்தின் மேன்மையை உணர்ந்து நீ 
விணாய் தரிசாக இருந்தவற்றை விளைநிலமாய் மாற்றினாய் அன்று

விளை நிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 
வாரி வாரி வழங்கி கையூட்டு பெறுகின்றனர் இன்று

தொழிற்சாலைகள் புதியன பல தொடங்கி நாட்டில் 
தொழிற் புரட்சியை தொடங்கி வைத்தாய் அன்று

உள்ளுர் தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளிநாட்டு 
உலகத் தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர் இன்று

அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம் 
அனைவருக்கும் அன்போடு கற்பித்தாய் நீ அன்று

அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம் 
அனைவரிடமும் காணாமல் போனது இன்று.
காமராஜர்-ஒரு சகாப்தம்

முதல்வராக இருந்த போதும் அன்னையே கேட்டபோதும்
முப்பது ரூபாய் கூடுதலாகத்தர மறுத்தாய் அன்று
வட்டச் செயலாளர்கள் கூட வாரிசுகளுக்கு
வளைத்துப் போடுகின்றனர் சொத்துகளை இன்று
இலவசக் கல்வி வழங்கிட அரசுப்பள்ளிகளை
எங்கும் தாராளமாகத்திறந்து வைத்தாய் அன்று
அரசுப்பள்ளிகளை மூடி தனியார் பள்ளிகள்
அளவின்றி தாராளக் கொள்ளைக்கு வழிவகுத்தனர் இன்று
வெள்ளையனே வெளியேறு என்று வீரகோசமிட்டு
வாள் ஏந்தி போராடி வரலாறு படைத்தாய் அன்று
வெள்ளையனே வருக கொள்ளையடித்துச் செல்க
விரிக்கின்றனர் ரத்தினக்கம்பளம் இன்று
விவசாயத்தின் மேன்மையை உணர்ந்து நீ
விணாய் தரிசாக இருந்தவற்றை விளைநிலமாய் மாற்றினாய் அன்று
விளை நிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு
வாரி வாரி வழங்கி கையூட்டு பெறுகின்றனர் இன்று
தொழிற்சாலைகள் புதியன பல தொடங்கி நாட்டில்
தொழிற் புரட்சியை தொடங்கி வைத்தாய் அன்று
உள்ளுர் தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளிநாட்டு
உலகத் தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர் இன்று
அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம்
அனைவருக்கும் அன்போடு கற்பித்தாய் நீ அன்று
அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம்
அனைவரிடமும் காணாமல் போனது இன்று.

வாழை இலையின் பயன்கள்


தெரிந்துகொள்வோம் :

வாழை இலையின் பயன்கள்

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி
காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும்
விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை
சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு
தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு
மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது
சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம்
இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு
இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில்
தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால்
ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும்
போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற
முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது
ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் குத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி
வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து
அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்

தமிழ் தந்த சித்தர்கள் - எண்ணிப் பாருங்கள் வியப்பாக இருக்கும் !

தமிழ் தந்த சித்தர்கள்
 
எண்ணிப் பாருங்கள் வியப்பாக இருக்கும் !

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.
"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."
- கணக்கதிகாரம்-
விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !

காமராஜர்-ஒரு சகாப்தம் - இது யார் சொத்து விபரம் தெரியுமா?

 
காமராஜர்-ஒரு சகாப்தம்
 
கண்டிப்பா படித்துவிட்டு like,share or Comment போடவும்.
1.சட்டை பையில் ..........................ரூபாய் 100
2.வங்கிகணக்கில்..........................ரூபாய் 125
3.கதர் வேட்டி....................................................4
4.கதர் துண்டு ...................................................4
5.கதர் சட்டை....................................................4
6.காலணி.............................................ஜோடி 2
7.கண் கண்ணாடி .............................................1
8.பேனா ..............................................................1
9.சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6


இது யார் சொத்து விபரம் தெரியுமா?

பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும்,பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்......
.இன்றைய அரசியல் வாதிகளுக்கு இவர் பெயரை சொல்லவே அருகதை கிடையாது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-யின் கடைசிக் காலம் துயரமாக இருந்ததாமே?


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-யின் கடைசிக் காலம் துயரமாக இருந்ததாமே?

உண்மைதான். நான்கரை ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு, 1912 டிசம்பரில் அவர் விடுதலையானார். சென்னை சிந்தா திரிப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர் எனப் பல்வேறு இடங்களில் குடியேறினார். சென்னை, கோவை, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, தூத்துக்குடி எனப் பல ஊர்களில் வாழ்ந்துபார்த்தார். ஆனால், வறுமை அவரை வாழவிடவில்லை. அரிசி விற்றார், நெய் விற்றார், மண்ணெண்ணெய் விற்றார். போராட்டக்காரனுக்கு வர்த்தகம் எப்படித் தெரியும்? முடியவில்லை. சுயராஜ்யா நிதியில் இருந்து திலகர் மாதம்தோறும் அனுப்பிவைத்த 50 ரூபாய் அவருக்கு ஓரளவு உதவியாய் இருந்தது.
தென்ஆப்பிரிக்கா தமிழர்கள் சிலர் வ.உ.சி-யிடம் கொடுப்பதற்காக ஒரு தொகையை காந்தியிடம் கொடுத்து அனுப்பினர். ஆனால், ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை. 'இப்போது இருக்கும் நிலையில் அந்தப் பணம் வேண்டாம் என்று நான் சொல்லப்போனால், அது நான் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இழைத்த தவறாகும்’ என்று வெட்கத்தைவிட்டு காந்திக்கு கடிதம் எழுதும் அளவுக்கு வ.உ.சி. இருந்தார். அவர் இறுதிக் காலத்தில் எழுதிவைத்த உயில் கண்ணீர் வரவைக்கும். தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடைக்கும், வன்னியத் தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்று சொல்லியிருக்கிறார். தியாகிகளைக் கவனிக்காமல் கடனாளியாக்கிய பாவத்துக்குத்தான் கடன்கார நாடாக நாம் மாறிக்கொண்டு இருக்கிறோம்.

- ஜூனியர் விகடன்

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!

''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,
இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’
நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.
உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.
நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.
எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்

விவசாயி கண்டுப்பிடித்த எலுமிச்சை ரகம்!!!!

விவசாயி கண்டுப்பிடித்த
எலுமிச்சை ரகம்!
திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி அந்தோணிசாமி என்ற எலுமிச்சை ரகம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார்
‘‘நான் பார்த்தவரை எலுமிச்சை ரகங்கள் வறட்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமலும், எளிதில் பட்டுப் போறதாகவும் இருந்துச்சு. 45 வருஷமா எலுமிச்சை சாகுபடி பண்ணிட்டு இருக்கேன். அந்த அனுபவத்தில கொத்துக்கொத்தா காய்க்குற நாட்டு எலுமிச்சையில 13 ரகங்களைத் தேர்ந்தெடுத்தேன்.
அதுல இருந்து ஒண்னை எடுத்துதான் இந்த புதிய ரகத்தை உருவாக்கினேன். இது இரண்டே வருஷத்துல காய்ப்புக்கு வந்துடுது. இதை மதுரை சேவா அமைப்பைச் சேர்ந்த விவேகானந்தன் அகமதாபாத்துல இருக்கற ‘தேசிய அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் சங்க’த்துக்கு அனுப்பி வெச்சாரு. அவுங்க இதைப் பல கட்டமா சோதிச்சுப் பாத்தப்ப, இந்த ரகத்துல எல்லா காய்களும் ஒரே சீரா இருந்ததைப் பாத்து பிரமிச்சுப் போயிட்டாங்களாம்’’ என்கிறார் அந்தோணி சாமி!
விவசாயப் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிலையங்களும் லட்சக்கணக்கில் செலவு செய்து, அவ்வப்போது புதிய ரகப்பயிர்களை அறிமுகப்படுத்தி வருவது வழக்கம். ஆனால், சில விவசாயிகள், தங்களுடைய அனுபவத்தை வைத்தே, பெரிதாக செலவேதும் இல்லாமல், புதுப்புது ரகங்களை சர்வசாதாரணமாக உருவாக்கி விடுவதுண்டு. இத்தகைய ரகங்களுக்கு முன்பாக... விஞ்ஞானிகளின் ரகங்கள் ஈடுகொடுக்க முடியாமல் போய்விடுவதும் உண்டு.
அந்தவகையில், ‘புளியங்குடி’ அந்தோணிசாமி உருவாக்கியுள்ள புதிய ரக எலுமிச்சையை, தென் மாவட்ட விவசாயிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுறார்கள். காரணம், குறுகிய காலத்தில், இரசாயன உரம் இல்லாமல் நல்ல விளைச்சல் கொடுக்கிறது.

பசுமை விகடன் இதழிலிருந்து....
விவசாயி கண்டுப்பிடித்த 
எலுமிச்சை ரகம்!

திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி அந்தோணிசாமி என்ற எலுமிச்சை ரகம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார்

‘‘நான் பார்த்தவரை எலுமிச்சை ரகங்கள் வறட்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமலும், எளிதில் பட்டுப் போறதாகவும் இருந்துச்சு. 45 வருஷமா எலுமிச்சை சாகுபடி பண்ணிட்டு இருக்கேன். அந்த அனுபவத்தில கொத்துக்கொத்தா காய்க்குற நாட்டு எலுமிச்சையில 13 ரகங்களைத் தேர்ந்தெடுத்தேன்.

அதுல இருந்து ஒண்னை எடுத்துதான் இந்த புதிய ரகத்தை உருவாக்கினேன். இது இரண்டே வருஷத்துல காய்ப்புக்கு வந்துடுது. இதை மதுரை சேவா அமைப்பைச் சேர்ந்த விவேகானந்தன் அகமதாபாத்துல இருக்கற ‘தேசிய அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் சங்க’த்துக்கு அனுப்பி வெச்சாரு. அவுங்க இதைப் பல கட்டமா சோதிச்சுப் பாத்தப்ப, இந்த ரகத்துல எல்லா காய்களும் ஒரே சீரா இருந்ததைப் பாத்து பிரமிச்சுப் போயிட்டாங்களாம்’’ என்கிறார் அந்தோணி சாமி!

விவசாயப் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிலையங்களும் லட்சக்கணக்கில் செலவு செய்து, அவ்வப்போது புதிய ரகப்பயிர்களை அறிமுகப்படுத்தி வருவது வழக்கம். ஆனால், சில விவசாயிகள், தங்களுடைய அனுபவத்தை வைத்தே, பெரிதாக செலவேதும் இல்லாமல், புதுப்புது ரகங்களை சர்வசாதாரணமாக உருவாக்கி விடுவதுண்டு. இத்தகைய ரகங்களுக்கு முன்பாக... விஞ்ஞானிகளின் ரகங்கள் ஈடுகொடுக்க முடியாமல் போய்விடுவதும் உண்டு.

அந்தவகையில், ‘புளியங்குடி’ அந்தோணிசாமி உருவாக்கியுள்ள புதிய ரக எலுமிச்சையை, தென் மாவட்ட விவசாயிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுறார்கள். காரணம், குறுகிய காலத்தில், இரசாயன உரம் இல்லாமல் நல்ல விளைச்சல் கொடுக்கிறது.

பசுமை விகடன் இதழிலிருந்து....

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.



இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.


ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.