Tuesday, October 30, 2012

இந்த மின்வெட்டு இன்னும் என்னமாதிரியெல்லாம் பிரச்னைகளை உண்டாக்குமோ?



ஐயோ மின்வெட்டு!

மின் தடை காரணமாக... இப்படியெல்லாம்கூட பிரச்னை ஏற்படுமா..? என்று அதிர வைக்கிறது விருதுநகரில் நடந்திருக்கும் ஒரு சம்பவம்! கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் பங்க்... இரவு 7 மணி... மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரம்...
அப்போது, மனைவியருடன் தத்தம் பைக்கில் வந்த இருவர், ஒரேமாதிரியான ஹெல்மெட் அணிந்திருந்தனர். பெட்ரோல் நிரப்புவதற்காக மனைவியரை இறக்கிவிட்டுள்ளனர். பின், ஒரு ஜோடி முத...
லில் சீறிக் கொண்டு புறப்பட்டுச் சென்றது. சாத்தூர் ரோட்டில் நீண்ட தூரம் சென்ற பின், ''என்ன மாமா! நாம தாதம்பட்டி போகணும்; நீங்க சாத்தூர் ரோட்ல போறீங்க?'' என்று பின்னால் அமர்ந்திருந்த பெண் கேட்க.... வாகனத்தை ஓட்டிய நபருக்கு தூக்கி வாரிப்போட்டிருக்கிறது. வண்டியை நிறுத்திப் பார்த்தவருக்கு.. அதிர்ச்சி! பின்னால் இருந்தது வேறு ஒரு பெண்.
பரஸ்பரம் மன்னிப்புக் கோரிக் கொண்டவர்கள்... மீண்டும் பெட்ரோல் 'பங்க்' வந்து சேர... கணவரைக் காணாமல் தவித்து நின்ற மனைவியும்; மனைவியைக் காணாமல் தவித்த நின்ற கணவரும் பெருமூச்சவிட்டுள்ளனர்.

ம்... இந்த மின்வெட்டு இன்னும் என்னமாதிரியெல்லாம் பிரச்னைகளை உண்டாக்குமோ?

No comments:

Post a Comment