Thursday, October 25, 2012

சூரிய எரிசக்தி திட்டம் 2012



தமிழக அரசு இறுதியாக மாற்று
எரிசக்திக்கு அசாரமிட்டுள்ளது.
சூரிய எரிசக்தி திட்டத்தை 
அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி ஒவ்வொரு வீட்டின் மீதும்
சூரிய எரிசக்தி கருவியை அமைத்து
கொள்ளலாம். அவ்வாறு அமைக்கப்படும்
கருவிக்கு முப்பது சதவிகிதம் மானியம்
அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள
கருவி வாங்கினால் முப்பது ஆயிரம்
ரூபாயை அரசு வழங்கி விடும். இது
தவிர...அவ்வாறு கருவி பொருத்தி
அதன் மூலம் உற்பத்தி செய்து நமக்கு
பயன்படுத்தி கொள்ளும் மின்சாரத்திற்கு
அரசு, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு
ஒரு யுனிட்டுக்கு இரண்டு ரூபாயும்,
மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளுக்கு
ஒரு யுனிட்டுக்கு ஒரு ரூபாயும்,
ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டுகளுக்கு ஒரு
யுனிட்டுக்கு ஐம்பது பைசாவும் வழங்குகிறது.
(இந்த ஊக்கத்தொகை 2014 மார்ச்
31 ம் தேதிக்கு முன் கருவி பொருத்தும்
நபருக்கு மட்டுமே கிடைக்கும்)
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை
அளக்க "நெட் மீட்டர்" பொருத்திக்கொள்ளலாம்.
இந்த திட்டம் முழுமையாக செயல்பட்டால்
இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டில்
மூன்றாயிரம் மெகா வாட் மின்சாரம்
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும்.
இதே போல தொழிற்சாலைகளிலும் பொறுத்த
அறிவுறுத்த பட்டுள்ளது.
தமிழகத்தின் தற்போதய மின் பற்றாக்குறை
சுமார் நான்கு ஆயிரம் மெகா வாட்.
தமிழகத்தில் ஆண்டுக்கு முன்னூறு
நாட்கள் சூரிய ஒளி தங்கு தடை
இன்றி கிடைக்கும் என்பதால் இந்த
திட்டம் வெற்றியடைய வாய்ப்பு
உள்ளது. அதே சமயம்...
நடுத்தர, மற்றும் அதைவிட
வருவாய் குறைவாக உள்ள
குடும்பத்தினருக்கு ஒரு
லட்சம், ஒன்றரை லட்சம்
ரூபாய் முதலீடு என்பது
கற்பனை கூட செய்ய முடியாதது.
அவர்களுக்கு இந்த திட்டம் பயன்
படுத்தக்கூடியதாக செய்ய வேண்டியது
அரசின் கடமை!
சூரிய எரிசக்தி திட்டம் 2012

No comments:

Post a Comment