Monday, October 8, 2012

கமல்ஹாசன் பற்றிய குறிப்புகள்



உலகம் பார்த்து உருகும் உலக சினிமாக்களைத் தமிழில் படைத்த படைப்பாளி கமல்ஹாசன் பற்றிய குறிப்புகள் ....

கமலுக்கு பொய் சொல்வது பிடிக்காது. எப்போதும் எதிராளியின் கண் பார்த்துதான் பேசுவார். 'பேசும்போது எச்சில் முழுங்கிக்கிட்டே பேசினால் பொய் சொல்றாங்கனு அர்த்தம்!’ என்பார். சாதத்ஹசன் மண்டோ படைப்புகள் ரொம்ப விருப்பம். அவரது படைப்பின் அசல் ருசியை உணர உருது கற்றுக்கொண்டவர். சைனீஸ் வகை உணவுகள் அவ்வளவு இஷ்டம். அநேகமாக கமல் உண்டிருக்காத ஜீவராசியே இருக்காது. அதே ஆர்வம் பழங்களின் மீதும் உண்டு. டயட் நம்பிக்கை கிடையாது. வயிறு நிறையச் சாப்பிட்டு சேகரித்த கலோரியை எரித்துவிட்டால் போதும் என்பார். முடியாது, கஷ்டம் - எடுத்த எடுப்பிலேயே இந்த வார்த்தைகளைச் சொன்னால், ரசிக்க மாட்டார். ''இறுதி வரை முயற்சித்தும் காரியம் ஆகவில்லை என்றால், சொல்ல வேண்டிய வார்த்தைகள் இவை'' என்பார்.

No comments:

Post a Comment