Thursday, October 16, 2014

இப்படியும் ஒரு தலைவன் இருந்தான்...கப்டன். தாமஸ் சங்கரா ஆபிரிக்காவின் சே குவாரா (டிசம்பர் 21 , 1949 - அக்டோபர் 15 , 1987)


இப்படியும் ஒரு தலைவன் இருந்தான்...

கப்டன். தாமஸ் சங்கரா 
ஆபிரிக்காவின் சே குவாரா
(டிசம்பர் 21 , 1949 - அக்டோபர் 15 , 1987)

ஆகஸ்ட் 4 , 1983 ஒரு இராணுவ புரட்சியின் மூலம் தனது 33 வது வயதில் மேற்கு ஆப்ரிக்க நாடான அப்பர் வோல்டாவின் ஆட்சியை கைபற்றினார்.

பதவிக்காக, எதிர்காலத்தில் தேசத்தை காட்டிக்கொடுக்கபோகும்  தன நண்பர்களினாலேயே சுட்டுகொல்லபடும் வரை (அக்டோபர் 15 , 1987 ) 4 ஆண்டுகள் 2 மாதம் 12 நாட்கள் ஆட்சிபொறுப்பில் இருந்தார்.

இந்த குறுகிய காலத்தில் அவர் செய்தவை
##################################

* அப்பர் வோல்டா என்று அழைக்க பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிரெஞ்சு காலனியான தங்கள் தேசத்துக்கு புர்கினபாசோ என்று பெயர் மாற்றினார் - பொருள்: தலை நிமிர்ந்து வாழ்பவர்களின் தேசம்.

* பெண் சிசுக்கொலை , பெண்களுக்கு கட்டாய திருமணம் மற்றும் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணம் புரிவதற்கு தடை விதித்தார்.

* உயர் அரச பதவிகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் மெர்செடீஸ் வகை கார்களை விற்றுவிட்டு இருப்பதிலேயே விலை குறைந்த ரெனால்ட் 5 வகை கார்களை வழங்கினார்.

* தனது ஊதியம் உட்பட  உயர் அரச பதவியில் இருக்கும் அனைவரது மாத ஊதியங்களும் குறைக்கபட்டன.

* எந்த அரசாங்க அமைச்சரோ அதிகாரியோ விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்யக்கூடாது. அரசாங்கத்தால் வழங்கப்படும் கார்களுக்கு வாகனவோட்டிகளை அரசு வழங்காது.

* பெரும் நிலக்கிழார்களின் அளவுக்கு அதிகமான நிலங்கள் அதில் வேலை செய்த விவசாய கூலிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 3 ஆண்டுகளில் ஹெக்டேருக்கு 1700 கிலோவாக இருந்த கோதுமை உற்பத்தி 3800 கிலோவாக உயர்ந்தது.

* அதுவரை பெற்றுவந்த எல்லா வெளிநாட்டு உதவிகளுக்கும் அனுமதி மறுக்கபட்டது. உனக்கு உணவிடுகிறவன் உன்னை கட்டுப்படுத்துகிறான் - எங்கள் மக்களுக்கு நீங்கள் உதவவும் வேண்டாம் எங்களை சுரண்டவும் வேண்டாம் என்பது அவரின் கொள்கை.

* உயர் பதவிகளில் உள்ள அரசாங்க ஊழியர்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை மக்கள் பணிகளுக்கு வழங்க வேண்டும் என்று  உத்தரவிட்டார்   

* ஆபிரிக்க நாடுகளின் ஒற்றுமைக்கு குரல் கொடுத்தார். ஆபிரிக்க நாடுகளை ஆக்கிரமித்திருந்த காலனிய ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றினார்.

* ஆப்ரிக்க நாடுகளுக்கு காலனிய சக்திகள் வழங்கிய கடனை திருப்பிதரவேண்டியதில்லை  என்றும். முறைப்படி அவர்கள் தான் சுரண்டப்படும் ஆப்ரிக்க நாடுகளுக்கு பணம் தரவேண்டும் என்றும் பரப்புரை மேற்கொண்டார்.

* தனது அலுவலகத்திலோ வீட்டிலோ காற்றுச்சீரமைப்பிகளை (Air conditioner) பயன் படுத்த மறுத்துவிட்டார்.

* அவர் சுட்டுக்கொல்லப்படும்  போது அவரிடமிருந்த மொத்த சொத்து - ஒரு பழைய கார், 4 மோட்டார் சைகிள்கள், 3 கிட்டார், 1 குளிர் சாதனப்பெட்டி (Refrigirator)

* இவை அனைத்தையும் விட முக்கியம் எந்த அரசாங்க அலுவலகத்திலோ பொது இடங்களிலோ தன புகைப்படத்தை வைக்ககூடாது என உத்தரவிட்டிருந்தார் ....

இன்று புர்கினபாசொவில் சுமார் 6.5 மில்லியன் மெட்ரிக் டன் தங்க படிமங்கள் மற்றும் ஏராளமான துத்தநாக (Zinc ) படிமங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கபட்டு சுரங்கங்களை அமைத்துள்ளது பன்னாட்டு நிறுவனங்கள். ஆனால் சுமார் 55 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள் - கல்வி அறிவு 30 % க்கும் கீழ், 10,000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை தொடர்கிறது .

தாமஸ் சங்கராவை நய வஞ்சகமாக கொலை செய்த அவரது நண்பன் பிளைஸ் கம்பாவோயே 1987 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அதிபராக தொடர்ந்து நீடிக்கிறார்...


Stalin Dass

இப்படியும் ஒரு தலைவன் இருந்தான்...
கப்டன். தாமஸ் சங்கரா
ஆபிரிக்காவின் சே குவாரா
(டிசம்பர் 21 , 1949 - அக்டோபர் 15 , 1987)
ஆகஸ்ட் 4 , 1983 ஒரு இராணுவ புரட்சியின் மூலம் தனது 33 வது வயதில் மேற்கு ஆப்ரிக்க நாடான அப்பர் வோல்டாவின் ஆட்சியை கைபற்றினார்.
பதவிக்காக, எதிர்காலத்தில் தேசத்தை காட்டிக்கொடுக்கபோகும் தன நண்பர்களினாலேயே சுட்டுகொல்லபடும் வரை (அக்டோபர் 15 , 1987 ) 4 ஆண்டுகள் 2 மாதம் 12 நாட்கள் ஆட்சிபொறுப்பில் இருந்தார்.
இந்த குறுகிய காலத்தில் அவர் செய்தவை
##################################
* அப்பர் வோல்டா என்று அழைக்க பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிரெஞ்சு காலனியான தங்கள் தேசத்துக்கு புர்கினபாசோ என்று பெயர் மாற்றினார் - பொருள்: தலை நிமிர்ந்து வாழ்பவர்களின் தேசம்.
* பெண் சிசுக்கொலை , பெண்களுக்கு கட்டாய திருமணம் மற்றும் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணம் புரிவதற்கு தடை விதித்தார்.
* உயர் அரச பதவிகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் மெர்செடீஸ் வகை கார்களை விற்றுவிட்டு இருப்பதிலேயே விலை குறைந்த ரெனால்ட் 5 வகை கார்களை வழங்கினார்.
* தனது ஊதியம் உட்பட உயர் அரச பதவியில் இருக்கும் அனைவரது மாத ஊதியங்களும் குறைக்கபட்டன.
* எந்த அரசாங்க அமைச்சரோ அதிகாரியோ விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்யக்கூடாது. அரசாங்கத்தால் வழங்கப்படும் கார்களுக்கு வாகனவோட்டிகளை அரசு வழங்காது.
* பெரும் நிலக்கிழார்களின் அளவுக்கு அதிகமான நிலங்கள் அதில் வேலை செய்த விவசாய கூலிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 3 ஆண்டுகளில் ஹெக்டேருக்கு 1700 கிலோவாக இருந்த கோதுமை உற்பத்தி 3800 கிலோவாக உயர்ந்தது.
* அதுவரை பெற்றுவந்த எல்லா வெளிநாட்டு உதவிகளுக்கும் அனுமதி மறுக்கபட்டது. உனக்கு உணவிடுகிறவன் உன்னை கட்டுப்படுத்துகிறான் - எங்கள் மக்களுக்கு நீங்கள் உதவவும் வேண்டாம் எங்களை சுரண்டவும் வேண்டாம் என்பது அவரின் கொள்கை.
* உயர் பதவிகளில் உள்ள அரசாங்க ஊழியர்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை மக்கள் பணிகளுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்
* ஆபிரிக்க நாடுகளின் ஒற்றுமைக்கு குரல் கொடுத்தார். ஆபிரிக்க நாடுகளை ஆக்கிரமித்திருந்த காலனிய ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றினார்.
* ஆப்ரிக்க நாடுகளுக்கு காலனிய சக்திகள் வழங்கிய கடனை திருப்பிதரவேண்டியதில்லை என்றும். முறைப்படி அவர்கள் தான் சுரண்டப்படும் ஆப்ரிக்க நாடுகளுக்கு பணம் தரவேண்டும் என்றும் பரப்புரை மேற்கொண்டார்.
* தனது அலுவலகத்திலோ வீட்டிலோ காற்றுச்சீரமைப்பிகளை (Air conditioner) பயன் படுத்த மறுத்துவிட்டார்.
* அவர் சுட்டுக்கொல்லப்படும் போது அவரிடமிருந்த மொத்த சொத்து - ஒரு பழைய கார், 4 மோட்டார் சைகிள்கள், 3 கிட்டார், 1 குளிர் சாதனப்பெட்டி (Refrigirator)
* இவை அனைத்தையும் விட முக்கியம் எந்த அரசாங்க அலுவலகத்திலோ பொது இடங்களிலோ தன புகைப்படத்தை வைக்ககூடாது என உத்தரவிட்டிருந்தார் ....
இன்று புர்கினபாசொவில் சுமார் 6.5 மில்லியன் மெட்ரிக் டன் தங்க படிமங்கள் மற்றும் ஏராளமான துத்தநாக (Zinc ) படிமங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கபட்டு சுரங்கங்களை அமைத்துள்ளது பன்னாட்டு நிறுவனங்கள். ஆனால் சுமார் 55 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள் - கல்வி அறிவு 30 % க்கும் கீழ், 10,000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை தொடர்கிறது .
தாமஸ் சங்கராவை நய வஞ்சகமாக கொலை செய்த அவரது நண்பன் பிளைஸ் கம்பாவோயே 1987 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அதிபராக தொடர்ந்து நீடிக்கிறார்...

No comments:

Post a Comment