Wednesday, August 6, 2014

உலகத்திலேயே இளநரையை போக்கும் அரிய மருந்தை பற்றி தெரியுமா?

உலகத்திலேயே இளநரையை போக்கும் அரிய மருந்தை பற்றி தெரியுமா? 

-----------------------------------------------------------
வயது குறைவாக இருக்கும், அவர் முடியை பார்த்தல் 60 வயது கிழவரின் முடிபோல் வெள்ளையாக இருக்கும். இதற்கு பெயர் இளநரை அல்லது பித்தநரை என்று அழைப்பார்கள்.
எனது உடன் வேலை செய்த நபர் ஒருவருக்கு மேற்சொன்னது போல தான் இருந்ததது, முடியை பார்த்தால் பழைய அரசியல்வாதி சு.சாமி முடியை போலத்தான் இருக்கும் .
ஒரு நான்கு ஆண்டுகள் கழித்து துபாயில் அவர் வேலை செய்த அலுவத்தில் எனக்கும் வேலை கிடைத்து அந்த இளநரை நபரை பார்க்கும்போது அவருடைய அடையாளமான நரை முற்றிலும் இல்லை. நான் நினைத்தேன் ஒருவேளை இவர் கருஞ்சாயம் பூசுவாரோ என நினைத்தேன்.
அதுபற்றி அவரிடம் கேட்கும்போது தான் தமிழ் மருத்துவத்தின் மகிமையை அறிந்துகொண்டேன்.
ஆம் அவர் கருஞ்சாயம் பூசவில்லை. இது சாயமில்லை என்னுடைய இயல்பான நிறம் என்றார்.
அதற்கான காரணத்தையும் கூறினார்.
சென்னை அடையாரில் உள்ள IMCOPS என்ற அரசின் சித்தா நிறுவனத்தில் கிடைக்கும் இரண்டு எண்ணெய்கள் மற்றும் ஒரு மாத்திரையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். இதனால் இளநரை முற்றிலும் இல்லாமல் போனதுடன், முடி உறுதியாகவும், அடர்த்தியாகவும், கொட்டாமலும் உள்ளது என்றார்.
இதோ அந்த மருந்து மற்றும் பயன்படுத்தும் முறை.
1) நீலிபிரிங்கதி தைலம் - 50ml bottle
2) பிரிங்காமலக தைலம் - 50ml bottle
3) பாவன கடுக்காய் - 100 மாத்திரைகள்
மூன்றையும் வாங்கி, இதில் இரண்டு தைலங்களை சம அளவில் தேங்காய் எண்ணெய் உடன் கலந்து தலையில் தேய்த்து வர வேண்டும். நாம் தினமும் தேய்க்கும் எண்ணெயை போல். கூட பாவனகடுக்காய் மாத்திரையை தினமும் ஒன்று சாப்பிட வேண்டும் .
தேய்க்க ஆரம்பித்த முதல் வாரத்தில் முடி கொட்டு முழுவதும் நின்றுவிடும். மேலும் இளநரை கருப்பு முடியாக மாறுவதை 2 முதல் 3 மாத காலத்தில் உணர்வீர்கள்.
இந்த எண்ணெயை இம்காப்ஸில் நேரிடையாக அங்குள்ள மருந்தகத்தில் வாங்கலாம். பெண்கள் இந்த எண்ணெயை தேய்த்தால் முடி கருகருவென அடர்த்தியாக வளரும். முடிகொட்டு இருக்காது.
இளநரை இல்லாதவர்கள் பாவனக்கடுக்காயை சாப்பிடவேண்டிய அவசியமில்லை.
இம்காப்ஸின் முகவரி
IMPCOPS LTD.,. 34-37,Kalki Krishnamurthy Salai, Thiruvanmiyur,Chennai-600-041. India.Contact Phone:91 24521029, 24520189,24520244
என்னட இது உலகத்திலேயே இந்த ஒரு மருந்துதான் இருக்கோ? கொஞ்சம் அதிகமாக சொல்கிறாரோ என நீங்கள் எண்ணலாம். உண்மைதாங்க உலகத்திலேயே இது போன்ற மருந்து இல்லை. இவ்வளவு சிறப்புவாய்ந்த மருந்தை நாம் தெரிந்துகொள்ளாமல் போனதிற்கு காரணம் ஒன்றுதான். நமக்கு தமிழையும் பிடிக்காத போது தமிழ் மருத்துவத்தை பற்றி தெரிந்துக்கொள்ள எப்படி ஆர்வம் வரும்.
அடையார் பேருந்து பணிமனையில் இருந்து திருவான்மியூர் போகும் வழியில் உள்ளது இந்த மருத்துவமனை.
பயன்படுத்தி பாருங்கள் நிச்சயமாக இளநரை நீங்கும். தமிழ் மருந்துகள் பக்கவிளைவுகள் இல்லாதது. இடையில் பயன்படுத்தாமல் நிறுத்தினால் கூட ஒரு பிரச்சனையும் வராது
Thanks பூச்சரம் புறவம்

No comments:

Post a Comment