Sunday, August 31, 2014

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ! ஔவையார் எழுதிய விநாயகர் அகவல்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !
--------------------------------------------------
ஔவையார் எழுதிய விநாயகர் அகவல் 
--------------------------------------------------
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச்சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகெரிப்பப்
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச்சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகெரிப்பப்

பேழைவயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்

பேழைவயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிரே
முப்பழம் நுகரும் மூஷிக வாகனா
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்

தாயாயெனக்குத் தானெழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடிவாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடாவகை நான் மகிழ்ந்தெனக் கருளி
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலம் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளி

கருவிகளொடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் களைந்தே
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கமறுத்து

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆராதாரத் தங்கிசை நிலையும்
தேறா நிறத்திப் பேச்சுரை அறுத்தே

இடைபிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி

குண்டலியதனிக் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலை
காலாலெழுப்பும் கருத்தறிவித்து

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயம் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி

ஷண்முக சூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளி
புரியட்டகாயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினிற் கபால வாயிற்காட்டி
இருத்தி முக்தி இனிதெனக்கருளி
என்னையறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள் வெளி இரண்டிற்கு ஒன்றிடமென்ன
அருள் தரும் ஆனந்தத்தழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தமளித்து
அல்லல் களைந்தே அருள் வழி காட்டி
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீரும் விளங்க நிறுத்தி
கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !
--------------------------------------------------
ஔவையார் எழுதிய விநாயகர் அகவல்
--------------------------------------------------
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச்சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகெரிப்பப்
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச்சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகெரிப்பப்
பேழைவயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
பேழைவயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிரே
முப்பழம் நுகரும் மூஷிக வாகனா
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாயெனக்குத் தானெழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடிவாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடாவகை நான் மகிழ்ந்தெனக் கருளி
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலம் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளி
கருவிகளொடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் களைந்தே
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கமறுத்து
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆராதாரத் தங்கிசை நிலையும்
தேறா நிறத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி
குண்டலியதனிக் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலை
காலாலெழுப்பும் கருத்தறிவித்து
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயம் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
ஷண்முக சூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளி
புரியட்டகாயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினிற் கபால வாயிற்காட்டி
இருத்தி முக்தி இனிதெனக்கருளி
என்னையறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள் வெளி இரண்டிற்கு ஒன்றிடமென்ன
அருள் தரும் ஆனந்தத்தழுத்தி என் செவியில்
எல்லையில்லா ஆனந்தமளித்து
அல்லல் களைந்தே அருள் வழி காட்டி
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீரும் விளங்க நிறுத்தி
கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே

No comments:

Post a Comment