Sunday, August 24, 2014

அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!

அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!
பேருந்துகுள் கொண்டுவந்து நாளிதழ்கள் விற்பார்கள் .,
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்..,
மிதி வண்டி வைத்திருந்தோம்.,
எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.,
கலைஞரின் அறிக்கைகளை தேடி படித்தார்கள்.,
எல்லா வீடுகளிலும் முதல் மரியாதை பாடல் ஒலித்தது.,
வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்.,
எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்.,
சாலையில் எப்போதாவது வண்டி வரும்.,
மழை நின்று நிதானமாக பொழியும்
,சாராய கடைகள் இருந்தன.,ஆனால் இன்றைய கூட்டம் அன்று என்றுமே இருந்ததில்லை.,
தமிழ் ஆசிரியர்கள் தந்நிகரற்று விளங்கினர்.,
வேலைக்கு போகாதவன் எந்த குடும்பத்திற்க்கும் பாரமாயில்லை.,
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது.,
சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்.,
முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்.,
பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்.,சிலின்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணிய வில்லை.,
சுவாசிக்க காற்று இருந்தது.,குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை.,
தெருவில் சிருமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
மயில் இறகுகள் குட்டி போட்டன,புத்தகத்தில்.,
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு அப்பாவிடம் அடி வாங்கினேன் ..,
மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே,ஆங்கிலம்.,
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால்
டவுசர்.,
கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,
நம்பிக்கைகளும்தான்.., மொத்தத்தில் மரியாதை இருந்தது.

No comments:

Post a Comment