Monday, August 27, 2012

" நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட "குமரிப் பெருங்கண்டம்".



நம் வரலாற்றைத்
தெரிந்து கொள்ள இந்த
முறை உங்களை 20,000
வருடங்களுக்கு முந்தைய
கடலில் மூழ்கிய
ஒரு உலகிற்கு அழைத்துச்
செல்லவிருக்கிறேன்,
என்னுடன்
சேர்ந்து பயணிக்க
உங்களின் பொன்னான 5
நிமிடங்களை ஒதுக்குங்கள்.
இங்குதான் உலகின் முதல்
மனிதன் பிறந்ததாக
வரலாற்று ஆய்வாளர்கள்
தெரிவிக்கிறார்கள்,
இங்குதான் நம்
மூதாதையர் வாழ்ந்தனர்.
இங்குதான் நாம்
இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ்
பிறந்தது. இங்குதான்
இன்னும் பல
வரலாற்று அதிசயங்கள்
நிகழ்ந்துள்ளன. ஆம்,
இதுதான் " நாவலன் தீவு "
என்று அழைக்கப்பட்ட
"குமரிப் பெருங்கண்டம்".
கடலுக்கடியில்
இன்று அமைதியாக
உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,
ஒரு காலத்தில்
பிரம்மாண்டமாக
இயங்கிக்கொண்டிருந்த
ஒரு மாபெரும் தமிழ்க்
கண்டம்!
இன்று தனித்தனி நாடுகளாக
உள்ள ஆஸ்திரேலியா,
மடகாஸ்கர்,
தென்னாப்பிரிக்கா,
இலங்கை,மற்றும் கிழக்கில்
உள்ள சில சிறு,
சிறு தீவுகளையெல்லாம்
இணைத்தவாறு இருந்த
ஒரு பிரம்மாண்ட
நிலப்பரப்பு தான்
"குமரிக்கண்டம்".

ஏழுதெங்க நாடு,
ஏழுமதுரை நாடு,
ஏழுமுன்பலை நாடு,
ஏழுபின்பலை நாடு,
ஏழுகுன்ற நாடு,
ஏழுகுனக்கரை நாடு,
ஏழுகுரும்பனை நாடு என
இந்நிலப்பரப்பில்
நாற்பத்தொன்பது நாடுகள்
இருந்துள்ளன! பறுளி,
குமரி என்ற
இரண்டு மாபெரும்
ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கொடு,
மணிமலை என
இரண்டு மலைகள்
இருந்துள்ளன!
தென்மதுரை, கபாடபுரம்,
முத்தூர் என
பிரம்மாண்டமான
மூன்று நகரங்கள்
இருந்தன. உலகின்
தொன்மையான நாகரீகம்
என்று அழைக்கப்படும்
சுமேரியன் நாகரீகம்
வெறும் நான்காயிரம்
வருடங்கள்
முந்தையது தான்.
நக்கீரர் "இறையனார்
அகப்பொருள்" என்ற
நூலில் மூன்று தமிழ்ச்
சங்கங்கள் 9990 வருடங்கள்
தொடர்து நடைபெற்றதாக
கூறியுள்ளார்.

தமிழின்
முதல் சங்கம் இந்த
கடலடியில் உள்ள "தென்
மதுரையில்" கி.மு 4440இல்
4449 புலவர்களுடன் , அகஸ்தியருடன் 39
மன்னர்களும்
இணைந்து நடத்தப்பட்டது.
இதில், "பரிபாடல்,
முதுநாரை,
முடுகுருக்கு,
கலரியவிரை, பேரதிகாரம்"
ஆகிய
நூல்களை இயற்றியுள்ளனர்.
இதில்
அனைத்துமே கடற்கோளில்
அழிந்துவிட்டன.

இரண்டாம் தமிழ்ச் சங்கம்
"கபாடபுரம்" நகரத்தில்
கி.மு 3700இல் 3700
புலவர்களுடன்
நடத்தப்பட்டது. இதில்,
"அகத்தியம்,
தொல்காப்பியம்,
பூதபுராணம்,
மாபுராணம்" ஆகிய
நூல்கள் இயற்றப்பட்டன.
இதில் "தொல்காப்பியம்"
மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம்
இன்றைய "மதுரையில்"
கி.மு 1850 இல் 449
புலவர்களுடன்
நடத்தப்பட்டது. இதில்,
"அகநானூறு,
புறநானூறு, நாலடியார்,
திருக்குறள்" ஆகிய
நூல்கள் இயற்றப்பட்டன.
இவ்வளவு பழமையான
தமிழனின்
வரலாற்றை பெருமையுடன்
உலகிற்கு தெரியப்படுத்த
வேண்டிய இந்திய
அரசு எந்த அக்கறையும்
காட்டாமல்
இருப்பது வேதனையான
விஷயம்! இந்திய
அரசு வெளிக்கொண்டுவரா
த நம் வரலாற்றை,
நாமே இந்த உலகிற்குப்
பரப்புவோம். இனிமேல்
நாம் 2000 வருடம்
பழமையானவர்கள் என்ற
பழங்கதையை விட்டு விட்டு 20,000
வருடத்திற்கும்
பழமைவாய்ந்த உலகின்
முதல் இனம் நம் தமிழினம்
என்று பெருமையுடன்
கூறுவோம். வரலாற்றுத்
தேடல் தொடரும்!
இதனைத் தமிழர்கள்
அனைவரிடத்திலும்
பகிருங்கள்
தோழமைகளே

1 comment:

  1. pazanthamiznadu patri www.theguide.jimdo.com conseincecentre@gmail.com nandri aa.mohan

    ReplyDelete