Wednesday, August 29, 2012

சித்தர்கள்



# சித்தர் - சித்தியை கைவர பெற்றவர்கள்
# 3 சித்தி - கர்ம சித்தி, யோகா சித்தி, ஞான சித்தி
# அசுத்த பூத அணுக்களை நீக்கி சுத்த பூத அணுகலால் தன் தேகத்தை மாற்றி அமைத்து
சுத்த தேகம்/பிரணவ தேகம் பெற்றனர்.
# சாககலை - சித்தர்கள் தங்கள் தேகத்தை ஞான தேகமாய் வேதியல் செய்து வெட்ட
வெளியில் மறைத்து விட்டார்கள்
# இவர்கள் சாதனை செய்தது சன்மார்க்கம்
# அவர்கள் நிழல் தரையில் விழுவதில்லை.
# பதி - சிவமாகிய இறைவன்
# பசு - ஆன்மாகிய தான்
# பாசம் -உலக தொடர்புகள் என்னும் மாயை
# சாக கல்வி
# தேகம்- உடல் தேகி ஆன்மா
# ஆன்மாவின் கருவி உடல்.
# கரணங்கள் (சேனை) நான்கு. அவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
# ஆன்மாவுக்கு இச்சை பட ஒரு மனம் வாய்த்திருகிறது, மனதின் இச்சையாகிய நமக்கு தேவை தான் என்று ஆமோதித்து நிச்சயா படுத்த புத்தி முன் வருகிறது.

தேகம் - உடல் தேகி - ஆன்மா
கரணம் - மனம் புத்தி அகங்காரம் சித்தம்

மெய்ப்பொருள் - எங்கும் எக்காலத்திலும் பரி பூரணமாக நீக்கமற நிறைந்து நிற்கும் ஒளிபொருள் எதனாலும் மாறுபாடு அடையாது. மெய் என்றால் என்றும் அழிவற்று உள்ள பொருள்.

அண்டம் - உலகம்
பிண்டம் - உடல்

வெளியே உள்ள பஞ்ச பூத இயற்கையின் ஆற்றல் தூல தேகம், அதற்குள் சூட்சம தேகமகாவும் , எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து இருப்பதை கண்டு பிடித்தான் சித்தன்.

ஐந்து பூதம் -
நிலம் - உடல்
நீர் - உதிரம்
தீ - சூடு
காற்று - இயக்கம்
ஆகாயம் -நினைப்பு மறைப்பு

தூல உடம்பு வேதியல் செய்து ஆன்ம ருபமாக்கி சாகத நிலை எய்தி
ஆனந்த கூத்து ஆடினர்.


செம்பிலும் கல்லிலும் கடவுளின் குறியீடுகள் ஆக்கி வழிபட்டு வந்த நிலை மாறி இறைவன் உள்ளும் புறமும் எங்கும் பரிபூரணமாக நீக்கமற நிறைந்து நின்று உலகத்தை நியதிபடுத்தி நடத்தும் அந்த பரிபூர்ணனான இறைவனை கண்டான்

குரு - அவர்களது தத்துவம் இலைமறை காயாக இருப்பதால் குரு காட்டினால் அன்றி காண முடியாத மறைப்பாக உள்ளது.

உருவம் அருவம் அருவாரூபம்

கல்வியின் பயன் தன்னை அறிய கற்பதுவும் , இறைவன் திருவடி அடைய கற்பது தான்.
இறைவ னது திருவடியை காட்டும் உயிர்கள் தேட தொடங்கி விட்டால்
போதும் தன்னை தேடுபவர்களை நோக்கி இறைவன் தன் கூட்டத்தை காட்டி
கொடுத்து அருளாளர் கூட்டத்தில் சேர்த்து விடுவான்.

தம் உடம்பை தவசாலை ஆக்கி, புலன்களை ஞான அக்னியில் வேள்வியாக்கி மனித மனதை உருக்கி அதை உருக்குலைய செய்து ஞான ஒளி பெற்று விடுகிறான்.

இவர்கள் நோக்கம் பிறவி நோய் , மன நோய் உடல் நோய் இம் மூன்று நோய்களால் அழுந்திஅறியாமை இருளில் கிடந்துழலும் மக்களை விழிக்க செய்வது.

No comments:

Post a Comment