Wednesday, August 29, 2012

திருமூலர் திருவடி என்று எதை சொல்கிறார் ???



திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

இறைவன் திருவடியே நமது கண்கள்!

இங்கு திருமூலர் திருவடி என்று எதை சொல்கிறார் என்பதை முதலில் விட்டு விடுவோம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்ன என்பதை ஆணித்தரமாக திருமூலர் அய்யா சொல்கிறார். ஆம் நான்கு வரிகளிலும் திருவடி திருவடி என்று திருப்பி திருப்பி சொல்கிறார்

விளக்கம்

“திருவடியிலே சிவமாகிய ஒளி உள்ளது.
திருவடியே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்க்கு நம்மை அழைத்து செல்லுமாதலால் அதுவே சிவலோகம்.
திருவடியே நமக்கு கதி மோட்சம் தரும். திருவடியே கதி என்று இருக்க வேண்டும்.
திருவடியே தஞ்சம் என பரிபூரணமாக சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும்!”

மேலே இருக்கும் விளக்கத்தில் இப்பொழுது “இறைவன் திருவடி கண்கள்” என்பதை பொறுத்தி படித்து கொள்ளுங்கள்.

எல்லாவற்றுக்கும் தேவை திருவடி! எல்லாம் பெற தேவை திருவடி! நாம் நாட வேண்டியது திருவடி! இதுதான் மெய்பொருள்!

1 comment:

  1. பாடல்.138
    திருவடி யேசிவ மாவது தேரிற்
    றிருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கிற்
    றிருவடி யேசெல் கதியது செப்பில்
    றிருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே

    விளக்கம்:- ஈசனது திருவடியே மனிதனுக்கு சிவலோதத்தை அடைய வழி என்பதை பற்றி விளக்குகிறார். மேலும் திருவண்ணாமலையில் மலை மீது இரண்டு பாதங்கள் பாறையில் செதுக்கப்பட்டு உள்ளது. அதற்கு மக்கள் பூசை வழிபாடுகள் செய்து தற்போதும் வழிபாடு செய்து வருகின்றனர். அதனால் தான் ஈசனது தாள் எனும் பொற்பாதம், திருப்பாதமே எல்லாம் என்கிறார்.

    அ)திருவடி யேசிவ மாவது தேரிற்:- திருவடியே+சிவம்+ ஆகும். தேரில் இறைவனது சிலையை வைத்து ஊர் மக்கள் கூடி தேர் இழுப்பதாகும். எனவே தேர் என்றால் ஒரு ஊடகம். இறைவனை அடைய மூலமாக ஒரு ஊடகமாக இருப்பது தேர் ஆகும் . அதுவே மனிதனது உடல் அதனால்தான் மனிதனுக்குள்ளும் இறை சக்தி உள்ளது என்பதை விளக்குவதற்காக நமக்கு கொடுத்துள்ள ஊடகம் நமது உடல் என்னும் தேர் ஆகும். இறைவனது திருவடியே சிவம் ஆகும்.


    ஆ)றிருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கிற்: திருவடியே சிவம் திருவடியே சிவலோகம் என சிந்திக்கின்ற மனப்பக்குவம் எப்பொழுது மனிதன் அடைகின்றானோ அப்பொழுது சிவன் ஈசன் உனக்குள் இருக்கிறான் என தெரிந்து கொள்ளலாம். காரணம் இதற்கு முந்தைய பாடலில் ஈசனது அடியையும் முடியையும் காண முடியாது என்பதற்கு ஏற்ப ஈசனது பொற்பாதங்களை வணங்கு என்று திருமூலர் பாடியுள்ளார் அதையே மிகப் பிற்காலத்தில் வாழ்ந்த மனிதனாக பிறந்த மாணிக்கவாசகர் திரூவாசகத்தின் முதல் பாடலில் *நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க எனப்பாடி இறைவனை அடையும் வழியை உலக மக்களுக்கு தந்துள்ளனர்.

    இ)றிருவடி யேசெல் கதியது செப்பிற்:- ஈசனின் திருவடியே உனக்கு கதி என்று நினைத்து துதி. செப்புதல் என்றால், சொல்லப்பட்டவற்றை, சொல்லியவாறே சொல்லுதலுக்குச் செப்புதல் என்று பெயர். சொல்லப்பட்ட அல்லது எழுதப்பட்ட இந்தப் பாடல்களை படி அல்லது எழுது அல்லது மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இரு என்று பொருள் வருவதால் ஈசனை அல்லது அதில் சொல்லப்பட்ட அறிவுரைகளை ஞானத்தை திரும்பத் திரும்ப படித்து உணர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் மட்டுமே மனிதர்களுக்கு சீசனது அருளை பெற வழி வகுக்கும் என்பதை உணர்த்துகிறார் சாதாரணமாக மனிதர்கள் தனக்கு துன்பம் நேரும் பொழுது மட்டுமே இறைவனை வேண்டி வணங்கி இந்த துன்பத்திலிருந்து விடுவிக்க அருள் புரிவாயாக என்று வேண்டுவது மனிதர்களின் இயல்பு அதையே அனுதினமும் மறவாமல் திரும்பத் திரும்ப ஈசனின் திருநாமத்தை குறைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை பற்றி உணர்த்துகிறார் என தோன்றுகிறது. அதுவே ஈசனுடைய அருளை பெறுவதற்குரிய நெறியாகும்.


    ஈ)றிருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே;- மேலும் இந்த உலக வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஈசனுடைய திருவடியை தஞ்சம் என அடைந்து உனக்கு தெளிந்து வணங்குபவர்களுக்கும் வழிபடுபவர்களுக்கும் மட்டுமே ஈசனுடைய முழு அருள் கிடைக்கும் வாழ்பவர்களுக்கு ஈஸ்வரி அருள் முழுமையாக கிடைக்கும் அதனால் தான் மாணிக்கவாசகர் தனது முதல் பாடலில் தாள் வாழ்க தாள் வாழ்க என்று பாடியுள்ளார்.

    ReplyDelete