Monday, December 8, 2014

யோக முத்திரைகள் செய்யும் முன்...நமது உடலை அதற்காக தயார் செய்வோமா...




யோக முத்திரைகள் செய்யும் முன்...நமது உடலை அதற்காக தயார் செய்வோமா...

முதலில் இரண்டு முத்திரைகள் மட்டுமே செய்து உடலை சுத்தப்படுத்திக்கொள்வோம்...

முதலில் யோகாசனத்தில் வரும் முத்திரையை செய்யவேண்டும்:
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வருபவர்க்கு முதுகுத்தண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது.இளமை ஏற்ப்படுதின்றது. முதுகுத்தண்டு வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருகின்றோம். இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுத்துவதால் நீடித்த மலச்சிக்கல் நீங்குகிறது.

குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது சித்தர் வாக்கு.

இதின் செய்முறை:
பத்மாசனத்தில் அமரவும்.இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு குதின்கால்களின் மேல் வைத்து கைவிரல்களை மூடிக்கொள்ளவும். அல்லது கைகளை பின்புறமாக மூடிக்கொண்டும் செய்யலாம். நிமிர்ந்து நேரே உட்காரவும்.

நுரைஈரல் நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும்.இப்போது மூச்சை விட்டுக்கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும்.பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இதை தொடர்ந்து 3 முதல் 7 முறை செய்யலாம்.

இந்த ஆசனம் பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் செய்வது அவ்வளவு எளிது அல்ல. சிலருக்கு என்ன செய்தாலும் பத்மாசனம் போடவே வராது. அவர்கள் பத்மாசனம் சரியாக வரும் வரையில் சாதாரணமாக சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

பலன்கள்:மலச்சிக்கல் நீங்கும்.முதுகுத்தண்டில் இறுக்கம் நீங்கி முதுகுவலி போன்றவை வராது.முகத்தில் பொலிவும்,தேஜசும் ஏற்படுகிறது.நாளடைவில் வயிறு(தொப்பை), இடுப்பு சதை மற்றும் தொடை பகுதிகள் குறைந்து அழகுடன் இருக்கும். இப்பகுதியில் இருக்கும் நரம்புகள் இறுக்கம் பெரும்.இதனால் இந்த அசனம் எளிதில் செய்து மூக்கை வைத்து தரையை தொடலாம்.

குறிப்பு:
இந்த அசனம் கர்ப்பிணிப்பெண்கள் செய்யக்கூடாது.

இரண்டாவதாக கழிவு முத்திரை:
கட்டைவிரலின் நுனிப்பகுதியால் மோதிரவிரலின் கீழ அதாவது மூன்றாவதுரேகை உள்ள இடத்தை தொடவும். மெல்லியஅழுத்தம்போதுமானது.

சம்மணம், பத்மாசனம், சித்தாசனம் இந்தநிலையில் சுவாசத்தை சாதாரணமாகநிலையில் வைத்து அதை கவனித்துவரவேண்டும்.

தினமும் ஒரு நிமிடங்கள் செய்யும்போது 15 நாட்களில் அல்லது அதற்க்கு முன்காகவே உடலின்கழிவுகள் வெளியேற ஆரம்பிக்கும். அப்போது சிறுநீர் அதிகம்போவது, அதில்வாடைவீசுவது, மலம் அதிகவாடையுடன் அடிக்கடிபோவது, கறுத்துமலம் வெளியேறுவது, வியர்வை அதிகம் வெளியேறுவது, அதில் வாடைவீசுவது, பேதி உண்டாவது, இந்த அறிகுறிகள் அனைத்தும் கழிவு நம் உடலைவிட்டு நீங்குவதாக அர்த்தம்.

பின்பு மூன்று மாதங்களுக்கொருமுறை ஏழுநாட்கள் தொடர்ந்து செய்தால் கழிவுகள் மீண்டும் சேராது

No comments:

Post a Comment