Monday, December 1, 2014

படித்த சமூகத்திற்கான விவசாய அரைகூவல்!! விவசாயமே விழித்துக்கொள்!! பசுமை குடில் என்னும் நோஞ்சான் தாவர வளர்ப்புமுறை!

படித்த சமூகத்திற்கான விவசாய அரைகூவல்!!

விவசாயமே விழித்துக்கொள்!!

பசுமை குடில் என்னும் நோஞ்சான் தாவர வளர்ப்புமுறை!

இயற்கையை புரிந்துகொள் என் விவசாய நண்பனே!
காடுகளை பார்த்து இயற்கை விவசாயம் கற்றுகொள் என்று #நம்மாழ்வார்சொன்னாரே!...
தாவரங்கள் வளர சூரிய வெளிச்சம் தான் மூலம் என்று மூன்றாம் வகுப்பு முதல் கற்றுகொண்டோமே!
இன்று சூரிய ஒளியை மறைத்து புது விவசாயம் என்ற ப்ராய்லர் கோழி வளர்ப்பு முறையில் தாவரங்களை வளர்கிறாயே என் விஞ்ஞான விவசாயிகளே....

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து பெற்றோர் வளர்க்கும் முறையில் தான் பெரியவன் ஆனதும் அவன் உடல்திடமும் உள்ளத்தின் வளமும் அமையும் என்று அறிவாயா.... ஏசி அறையில் வளர்ந்த மனிதனுக்கும் காடு மேடுகளில் இயற்கையாய் வாழும் மனிதனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் நீ அறிவாய் என்று நினைக்கிறன்..

சுதந்திரமாய் ஓடி பூச்சிகளையும் பசுமையான இலை தழைகளையும் உண்ணும் நாட்டு கோழிகளுக்கும், கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் கோழிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் உணர்வாயா.....! உன் வீட்டு பெண் குழந்தைகள் 10 வயது பருவம் அடையும் ரகசியம் இதுவென்று அறிவாயோ..? பிஞ்சிலேயே பழுத்து விரைவிலேயே வெம்பிவிடும் என்ற பழமொழியின் கூற்றுப்படி அந்த பெண்மை வெம்பி போகும் வேதனை புரியவில்லையோ!!! இன்றைய நாட்களில் சிறுவயது ஆண்மகனும் பெண்களின் கற்பை சூறையாடும் மனதை இந்த கூண்டு வளர்ப்பு கோழி உண்பதால் என்ற அறிவை பெறாமல் போனாயோ!!

நம் நாட்டு மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று சூரிய ஒளியில் குளியல் போட்டு வயிறாற உண்டு மகிழ்ந்த காலம் மாறி... இன்று காலனாய் மனிதன் மாறி அவற்றை கொன்று தின்னும் சூழலில் மடி பெருத்த மாடுகளின் பாலை குடிக்கும் இன்றைய பெண்களின் மார்பக புற்றும் , அளவு பெருத்த மாரும் என் தாய்க்குலத்தின் இன்றைய நோய் என்பதை அறிந்தாயோ?!!
என் வீட்டு கிழவன் இன்றும் வசை பாடுகிறான் "என் தலைமுறை பெண்ணின் மாரயும், என் நாட்டு மாடுகளின் மடியையும் பாருடா பேராண்டி!, உன் நவநாகரீக பெண்ணையும் மடி பெருத்த ஊசி போட்டு பால் கறக்கும் இயந்திர மாடுகளையும் ஒப்பிட்டு பார்த்து தெரிஞ்சுக்குவ!.. 80 வயதிலும் ஓடி ஆடும் உன் கிழவி எப்படி 18 புள்ள பெத்தான்னு... புரிஞ்சுகுவ-ன்னு", என் கிழவன் சொல்லும்போதெல்லாம் என் பெண்களின் நிலை அழகு இல்ல..நோய் என்று உணர்கிறேனே..
நீயும் ஒரு நாள் உணர்வாய் நண்பனே!!

உணவுக்காக இப்படி ஆடு,மாடு,கோழிகளை சிறைகளில் வளர்த்து உண்ணும் உன் உடலின் நிலையும் உன் குணமும் நீ உண்ணும் உணவை போன்று மாறும் என்ற கல்வி பெற்றுகொண்டிருப்பாய் என்றால்.. மனிதன் என்ற இயற்கைக்கு தாவரம் என்னும் உணவு எப்படி கிடைக்கிறதோ அதை பொறுத்து தான் அவன் உடல்நலமும் குணநலமும் அமையும் என்ற கல்வியும் பெற்றுக்கொள்..

கூண்டுகளில் வளர்க்கப்படும் தாவர உணவுகள் உண்மையில் உன் உணவாக அமையாது நண்பனே.. உணவை போன்ற ஒன்று.. ஆனால் உணவல்ல.. ஒரு தாவரம் வளர சூரியஒளி அவசியம்.. அதற்கு அதிகமான சூரிய ஒளி கிடைத்தாலும் தன்னை பாதுகாத்துக்கொள்ளும்.. பல கோடி ஆண்டுகளாய் எந்த தாவரமும் தனக்கு போர்வை போர்த்திக்கொள்ளவில்லை..
இன்றைய மனிதனின் படிப்பும் அறிவும் தன்னை இயற்கையில் இருந்து தனித்து கொண்டது போதாதென்று தான் சார்ந்து வாழும் தாவரங்களையும் பிரிக்க பார்க்கிறான்.. தனக்கு குளிர் தாங்காது, மழை தங்காது, வெயில் தாங்காது என்பதற்காக தாவரங்களும் அப்படி தாங்காது என்று முடிவு செய்து அவற்றிற்கும் போர்வை போற்றி வளர்க்கிறானே!! இவன் படிப்பறிவையும் விஞ்ஞான அறிவையும் எந்த குழியில் புதைக்கலாம்!!

தாவரங்கள் வளர சூரிய ஒளி தேவை என்பதை உணர்ந்துகொள் நண்பனே!
அது எவ்வளவு வெயில் என்றாலும் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் தகவமைப்பை பெற்றுள்ளது .. பசுமை குடில் என்னும் போர்வை போட்டு வளர்க்காதே.. உன் மனம் தான் அடிமையாய் சிறை வாழ்க்கை வாழ்கிறது.. கால்நடைகளை தான் சிறையில் அடைத்து வளர்கிறாய் என்றால் தாவரங்களையும் வளர்க்காதே!!

தீர்வு இது தான்! படித்த விவசாயிகளே!
தாவரங்கள் வாழ்வதற்கு தேவையான சூழ்நிலைகளை மட்டும் உருவாக்கி கொடு.. நீ போர்வை போட வேண்டியது தாவரத்திற்கு இல்லை, தாவரம் வளரும் மண்ணிற்கு. தாவரம் வளரும் மண்ணை நீ எப்போது கண்ணில் பார்க்க கூடாத அளவிற்கு மட்க கூடிய இலை தழை குப்பைகளை தாவரத்திற்கு அடியிலிருந்து அது வளரும் எல்லா இடங்களிலும் போர்வையால் மூடு..நீ உன் தாய் என்ற மண்ணை தான் காக்க வேண்டும்..மண் என்னும் தாய் உன் குழந்தை என்னும் தாவரங்களை பார்த்துக்கொள்வாள்..

கருவில் இருக்கும் குழந்தைக்கு போர்வை போற்றி விடும் விஞ்ஞான அறிவில் மாட்டிக் கொள்ளாதே விவசாயமே!..
#கல்வி வேறு
#படிப்பு வேறு நண்பனே..

#பாமரன் விழி பிதுங்கி நிற்கிறான்.. படிப்பு என்ற மூட நம்பிக்கை திணித்து உன்னை யோசிக்க கூட முடியாத நோயாளி ஆக்கிவிட்டார்கள் ..
விழிப்புடன் இல்லை என்றால் உன் விழி புடுங்கப்படும்!!

No comments:

Post a Comment