Wednesday, April 17, 2013

"உதவி செய்த முதியவருக்கு முகத்தில் கண் இல்லை ஆனால் மற்றவர்களின் மனதை அறியும் கண் மனதில் உள்ளது."


நேற்று கடை வீதிக்கு சென்றிருந்தேன் அப்பொழுது நான் பார்த்த காட்சி.

எப்பொழுதும் மதுரை சித்திரை திருவிழா போல் கூட்டம் நிரம்பி வழியும் அந்த தெருவில் ஒருவர் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார். யாருமே அவரை கண்டுகொள்ள வில்லை. பணம் வேண்டி அவர் தன்னையே துன்புருத்திக்கொண்டிருந்தார். அவர் அருகில் அவரின் குழந்தை பசியில் அழுதுகொண்டிருந்தது. அந்த குழந்தையின் அழுகை சத்தம் என் காதுகளை கிழித்தது. அப்படி ஒரு அழுகை. இது எதையுமே கண்டுகொள்ளாமல் மக்கள் கூட்டம் அங்கும் எங்கும் சென்றுகொண்டிருந்தது. அவருக்கு உதவ எண்ணினேன். அவரிடம் பத்து ரூபாய் கொடுத்தேன். சந்தோஷத்துடன் வாங்கிக்கொண்டு திரும்பவும் தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார். நான் நிற்கும் இடத்திற்கு அருகில் ஒரு கண் தெரியாத முதியவர் போமைகள் விற்றுக்கொண்டிருந்தார். அவர் என்னை அழைத்து இருபது ரூபாய் கொடுத்து சாட்டையால் அடித்துக் கொண்டிருக்கும் நபரிடம் கொடுக்கச் சொன்னார். எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம்.
அய்யா ! நீங்களே கடினப்பட்டு உழைக்கிறீங்க உங்களையே யாரும் கண்டுகொள்ள அப்படி இருந்தும் அவருக்கு உதவுறீங்கலே என்று கேட்டேன். நான் உதவு கூடாதுன்னு சொல்லுறீங்களா ? என்று கேட்டார். இல்லை அய்யா, உதவலாம் தவறில்லை ஆனால் உங்கள் சக்திக்கு இருபது ரூபாய் கொஞ்சம் அதிகம் என்றேன்.

அதற்க்கு அந்த முதியவர் சொன்னார் அந்த குழந்தை பசியால் அழுகிறது அந்த அழுகையை கேட்கையில் மனசு வலிக்கிறது. இந்த கடை வீதியில் "பத்து ரூபாய்க்கு" எந்த உணவும் கிடையாது குறைந்த பட்சம் "இருபது ரூபாய்." இருபது ரூபாய் கிடைப்பதற்காக அந்த தந்தை சாட்டைகளால் அடித்துக் கொண்டிருக்கிறார் “உண்மையில் அந்த அடி அந்த பிஞ்சுக் குழந்தையின் வயிற்றில் தான் விழுகிறது”. பணம் சம்பாரிப்பது எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும் அதனால் தான் அதிகமாக உதவினேன். நான் கொடுத்த காசு அந்த குழந்தைக்கு ஒரு வேலை உணவை தரும் என்று திருப்பதி நான் எவ்வளவு சம்பாரித்தாலும் எனக்கு கிடைக்காது என்றார். "மெய் சிலிர்த்துப் போனேன்" பரம்பரை பணக்காரன் கூட காசை சேகரிப்பதில் தான் குறியாக இருக்கிறானே ஒழிய இல்லாதவர்களுக்கு உதவ யோசிக்கிறான், தங்கள் சேகரிக்கும் பணத்தை கோவில் உண்டியளிலும், சாமியார்களின் காலடியிலும் தான் போடுகிறார்கள். ஆனால் அடித்தட்டு மக்கள் தான் மற்றவரின் தேவை அறிந்து உதவுகிறார்கள் ஏன் என்றால் அவர்களும் இந்த பசி போராட்டத்தை தாண்டித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதால்.

"உதவி செய்த முதியவருக்கு முகத்தில் கண் இல்லை ஆனால் மற்றவர்களின் மனதை அறியும் கண் மனதில் உள்ளது."


- நந்த மீனாள்

சிந்தனை சிறப்பி
நேற்று கடை வீதிக்கு சென்றிருந்தேன் அப்பொழுது நான் பார்த்த காட்சி. 

எப்பொழுதும் மதுரை சித்திரை திருவிழா போல் கூட்டம் நிரம்பி வழியும் அந்த தெருவில் ஒருவர் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார். யாருமே அவரை கண்டுகொள்ள வில்லை. பணம் வேண்டி அவர் தன்னையே துன்புருத்திக்கொண்டிருந்தார். அவர் அருகில் அவரின் குழந்தை பசியில் அழுதுகொண்டிருந்தது. அந்த குழந்தையின் அழுகை சத்தம் என் காதுகளை கிழித்தது. அப்படி ஒரு அழுகை. இது எதையுமே கண்டுகொள்ளாமல் மக்கள் கூட்டம் அங்கும் எங்கும் சென்றுகொண்டிருந்தது. அவருக்கு உதவ எண்ணினேன். அவரிடம் பத்து ரூபாய் கொடுத்தேன். சந்தோஷத்துடன் வாங்கிக்கொண்டு திரும்பவும் தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார். நான் நிற்கும் இடத்திற்கு அருகில் ஒரு கண் தெரியாத முதியவர் போமைகள் விற்றுக்கொண்டிருந்தார். அவர் என்னை அழைத்து இருபது ரூபாய் கொடுத்து சாட்டையால் அடித்துக் கொண்டிருக்கும் நபரிடம் கொடுக்கச் சொன்னார். எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம்.
அய்யா ! நீங்களே கடினப்பட்டு உழைக்கிறீங்க உங்களையே யாரும் கண்டுகொள்ள அப்படி இருந்தும் அவருக்கு உதவுறீங்கலே என்று கேட்டேன். நான் உதவு கூடாதுன்னு சொல்லுறீங்களா ? என்று கேட்டார். இல்லை அய்யா, உதவலாம் தவறில்லை ஆனால் உங்கள் சக்திக்கு இருபது ரூபாய் கொஞ்சம் அதிகம் என்றேன்.

அதற்க்கு அந்த முதியவர் சொன்னார் அந்த குழந்தை பசியால் அழுகிறது அந்த அழுகையை கேட்கையில் மனசு வலிக்கிறது. இந்த கடை வீதியில் "பத்து ரூபாய்க்கு" எந்த உணவும் கிடையாது குறைந்த பட்சம் "இருபது ரூபாய்." இருபது ரூபாய் கிடைப்பதற்காக அந்த தந்தை சாட்டைகளால் அடித்துக் கொண்டிருக்கிறார் “உண்மையில் அந்த அடி அந்த பிஞ்சுக் குழந்தையின் வயிற்றில் தான் விழுகிறது”. பணம் சம்பாரிப்பது எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும் அதனால் தான் அதிகமாக உதவினேன். நான் கொடுத்த காசு அந்த குழந்தைக்கு ஒரு வேலை உணவை தரும் என்று திருப்பதி நான் எவ்வளவு சம்பாரித்தாலும் எனக்கு கிடைக்காது என்றார். "மெய் சிலிர்த்துப் போனேன்" பரம்பரை பணக்காரன் கூட காசை சேகரிப்பதில் தான் குறியாக இருக்கிறானே ஒழிய இல்லாதவர்களுக்கு உதவ யோசிக்கிறான், தங்கள் சேகரிக்கும் பணத்தை கோவில் உண்டியளிலும், சாமியார்களின் காலடியிலும் தான் போடுகிறார்கள். ஆனால் அடித்தட்டு மக்கள் தான் மற்றவரின் தேவை அறிந்து உதவுகிறார்கள் ஏன் என்றால் அவர்களும் இந்த பசி போராட்டத்தை தாண்டித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதால். 

"உதவி செய்த முதியவருக்கு முகத்தில் கண் இல்லை ஆனால் மற்றவர்களின் மனதை அறியும் கண் மனதில் உள்ளது."


- நந்த மீனாள்

சிந்தனை சிறப்பி

No comments:

Post a Comment