Thursday, April 18, 2013

பாலா விக்ரமைப் பற்றி

பிறந்தநாள் வாழ்த்துகள் விக்ரம்.... விக்ரம் எப்படி சியானாக மாறினான்...அண்ணன் பாலா விக்ரமைப் பற்றி..

"படத்தின் பெயர் அகிலன். மறுநாள் படத்தின் பூஜை. ஆனால் முன்னிறவே படம் நிறுத்தப்பட்டது. ஆடிப்பாய்விட்டேன். இது தெரிந்த இருவர் இளையராஜா ,சிவக்குமார். "அதனால என்ன பாலா , வா இன்னொரு தயாரிப்பாளர் பார்கலாம் " என்று கட்டி அனைத்து ஊக்கம் தந்தார்கள்.

என்னை பெற்றெடுத்த அப்பன் வாயிலாக ஒரு தயாரிப்பாளர் கிடைத்தார்..

மறுபடியும் எல்லாமே புதுசாகத் தேட வேண்டும்.!

இளையராஜா ,சிவக்குமார் மட்டும் எப்போதும் எனக்காக இருந்தார்கள். சரி. ஹிரோ யார் ???

இதுதான் வாழ்க்கை என்று என்னைப் போலவே நம்புகிற ஒரு ஆள் வேண்டும்.... தேட வேண்டிய அவசியமில்லை . விக்ரம் இருந்தான்.என்னைப் போல் ஒருவன்/

நண்பன்,,அழகன். மிகப் பண்பான ஆசாமி. திசையெல்லாம் முட்டி மோதிப்பார்ததும் வெற்றியை மட்டும் ருசிக்காத இளைஞன். வருவேண்டா ஒரு நாள் என்ற வெறியும் வேகமும் தாக்கமும் அப்போது விக்ரமிடம் இருந்தது..

ஒரு நாள் விக்ரமிடம் பேசினேன்... "இந்த படத்துல ஒரு முக்கியமான போர்ஷனுக்காக இருபது கிலோ வரைக்கும் எடை குறைக்க வேண்டியிருக்கும் என்று என் தேவையை நான் விவரிக்க, விக்ரமின் கண்கள் பளபளத்தன..

"நான் பண்றேன் பாலா..உஙகள மாதிரிதான் நானும் நிறைய படம் பணணிட்டேன் ,ஆனா சொல்லுபடியா எதுவும் இல்ல. என் வேதனைய நான் வெளியே சொன்னது கிடையாது.எனக்கு இப்போ வெளிச்சம் தெரியுது பாலா.." வார்த்தைக்கு வார்த்தை "பாலா பாலா "
என்று என்னை யாருமே நம்பாதபோது, தன்னை தந்தவன் விக்ரம்..

ஆரம்பமானது சேது..

பெப்ஸி - படைப்பாளிகள் தகராறு.. ஒரு வருடம் ஷுட்டிங் இல்லை.. இடி விழுந்த கருகிய செடி ஆகி விட்டோம்...

இந்த வேளையில் விக்ரம் ஒரு டெலி சீரியல் நடித்து விட்டு , திரும்பிவந்த போது,,கையில் அறுபதாயிரம் ரூபாய்.

"இந்தாக பாலா நீங்களும் பணத்துக்கு சிரமப்படறீங்கதானே.. இதுல எனக்குப் பாதி உங்களுக்குப் பாதி என்று வலுக்கட்டாயமாக என் கையில் திணித்துவிட்டுப் போனான்..
என்ணையும் என் தேவைகளையும் நான் சொல்லாமலே புரிந்துகொண்ட ஆத்மா.

ஒரு வழியாக படம் துவங்கி முதல பாதி படப்பிடிப்பு முடிவடைந்தது....

ஒரு மாத ஓய்வு. ஒரு நாள் விக்ரமை சந்திக்க, அவரது வீட்டுக்போயிருந்தன். பட்டினி கிடந்ததில் பாதி ஆளாகியிருந்த போது.. ரொம்ப கஷ்டமா இருக்கா விகரம் கேட்டபோது

" இல்லே பாலா,, என்று பலவீனம் மறைத்து சிரித்த விக்ரம்,," நான் ஆக்ஸிடண்டல அடிப்பட்டு கிடந்தப்போ, எங்க சொந்தகாரர் ஒருத்தர்.. இனிமே சினிமால எங்க நடிக்கபபோற ?அதுசரி உனக்குனு ஏதாவது நொண்டி கேரக்டர் கிடைக்கும்ல'னு சொன்னார்..எவ்வளவு வக்கிரமான வார்த்தைகள்..பழிவாங்கறதுனா..அடிக்கறது உதைக்கறது அவமானப்படுத்தறது இல்ல,,அவங்க
கண்ணு முன்னால ஜெயிக்கனும்.
நாம ஜெய்போம் பாலா ..பிராமீஸ் பாலா"..என்ற விக்ரமின் வார்த்தைகளை வாழ்க்கை முழுக்க நினைவில் வைத்திருப்பேன்.

ஆட்டம் ஆரம்பமானது.

ஒரு நாள் அத்தனை கூட்டமும் லஞ்ச பிரேக்கில் சாப்புட போ்வுட, குப்பைக்கு நடுவே சுருண்டு கிடந்த விகரமைப் பார்ததப்போது எனககு பொங்கி விட்டது..இப்பட ஒருவொறியா,,தவமா,,,அர்பணிப்பா ..
உன்னைப் போயா ராசி இல்லாதவன்னு ஒதுக்கிச்சி இந்த சினிமா. உன்னை கொண்டு வரேன் பாரு.. சென்டிமென்ட் சனியனை எல்லாம் அடிச்சு நொறுக்கறேன் பாரு...எனக்குள் வன்மம் தாண்டவமாட ஆரம்பி்த்தது....

தியேட்டருக்கு வராமல் நூறு நாட்கள் ஓடிய படம் "சேது"வாகதான் இருக்கமுடியும்.

“பெரும் போராட்டாமாக இருந்தது ஒவ்வோரு நாளும்.ஒரு வழியாக விநியோகஸ்தர்களையும் தியேட்டர் உரிமையாளர்களையும் கெஞ்சிக் கூத்தாடிப் “சேது” படத்தை ரிலீஸ் செய்துவிட்டோம்.முதல் நாள் சத்தமே இல்லை.ஊர் ஊராக தியேட்டர் தியேட்டராக
ஓடினேன்…”ஒரு வாரம் பொறுமையாக இருங்க சார்… நிச்சயம் பிக்கப் ஆயிடும் சார்!”. என்று காலில் விழுந்து பிச்சை எடுக்காத குறை.யாரும் கேட்பதாக இல்லை.இரண்டு,மூன்று நாட்களில்
படத்தை தூக்கிய தியேட்டர்களெல்லாம் உண்டு.
ஆனால் மறுவாரம் பத்திரிகை,டி.வி. விமர்சனங்கள் ‘சேது’வை தலையில் தூக்கிவைத்து கொண்டாடின.’50 மார்க்’ போட்டது விகடன்,சன் டி.வி. திரை விமர்சனத்தில் ‘குறிஞ்சி மலர்’ என
புகழ்ந்தது.தியேட்டர்கள் திருவிழாக் களங்களாயின………..

.சேது வின் வெற்றி - வி்க்ரமின் வெற்றி
வி்க்ரமின் வெற்றி - எனது வெற்றி ...

பிறந்தநாள் வாழ்த்துகள் விக்ரம்

No comments:

Post a Comment