Tuesday, September 18, 2012

ஆய்த எழுத்து (ஃ - அஃகேனம்)


ஆய்த எழுத்து (ஃ - அஃகேனம்)

ஆய்த எழுத்து தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும். ஆய்த எழுத்தைத் தனியே பயன்படுத்துவது அரிது. பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

ஆய்த எழுத்தை அஃகேனம் என்றும் அழைப்பர். இதற்கு முப்புள்ளி, தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு, இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

எ.கா:
1) அஃது - இதில் அ என்பது குறில் எழுத்து. து வல்லின உயிர்மெய்யெழுத்து ஆகும்.

2) இஃது - இதில் இ என்பது குறில் எழுத்து. து வல்லின உயிர்மெய்யெழுத்து ஆகும்.

No comments:

Post a Comment