Monday, September 3, 2012

இயற்கை வாழ்வியல் பயிற்சி - இயற்கை ஞானி நம்மாழ்வார்





கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண் பண்ணையில் வருகிற செப்டம்பர் மாதம் 14.9.2012 முதல் 16.9.2012 ஆகிய 3 நாட்களில் இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும். செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல்
மூலம் பயிற்சி நடைபெறும்.

இந்த களப்பயிற்சியை " இயற்கை ஞானி நம்மாழ்வார் " அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.

ஏங்கல்ஸ் ராஜா இந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சிக் கட்டணம் ரூபாய் 750/- மட்டும்.தங்குமிடம், உணவு இலவசம்.

முன்பதிவு அவசியம் . மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 94880 55546
பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல், கரூர் மாவட்டம் - 621 311

இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.
மருந்தே இல்லாத உடல் நலம்
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.

No comments:

Post a Comment