Thursday, September 6, 2012

படித்ததில்​-பிடித்தவை

பொண்ணுங்களைப் பசங்க ரெண்டே வகையாத்தான் விவரிக்கிறார்கள்... 

1.என்னா பொண்ணுடா அவ? 
2.பொண்ணாடா அவ? 

***************************** 
பெயருக்குப் பின்னால் அப்பா பெயரோடு தொலைந்து போகும் தோழிகள்... 
கணவர் பெயரோடு பேஸ் புக்கில் திரும்பக் கிடைக்கிறார்கள். 

******************************** 
நான் எந்த பாதையில் செல்ல வேண்டுமென்பதை முன்னாள் செல்லும் ஸ்கூட்டியே நிர்ணயிக்கிறது..! 


*************************** 

வெறுப்பை மறைத்து சிரிப்பை அலுவலகத்திலும்., 
சிரிப்பை மறைத்து வெறுப்பை வீட்டிலும் உமிழ்கிறேன்! 
  
****************************** 
  
என்னது? மெழுகுவர்த்தியின் பயன்பாட்டை அதிகப் படுத்திய அம்மாவுக்கு, 
இன்னும் மெழுகுச் சிலை வைக்கவில்லையா? 
  
********************************** 
  
நீங்கள் எங்கே வசித்தாலும், பார்த்த மாத்திரத்தில்  உங்களை  உங்கள் ஊரோடு இணைக்க வல்லவை ஜவுளிக்கடை கட்டைப் பைகள்! 
  
********************************** 
  
தவறுகளுக்கான காரணங்கள் நியாயமாகவே இருக்கின்றன., நாம் செய்தால் மட்டும். 
  
************************************** 
  
வேலைவெட்டி இல்லாத ஆணை கல்யாணம் செய்ய பெண் முன் வராத வரை., 
சம உரிமை என்பது வெறும் கூச்சல்! 
  
************************************** 
  
குளிரை அனுபவிக்கிறேன்னு ஊட்டியில போய் ஹீட்டர் போட்டு கிட்டு தூங்குபவனே மனிதன்!!! 
  
************************************** 
  
புத்தாண்டில் ஒன்றும் மாறப்போவதில்லை... என்பது திங்கட்கிழமை அலுவலகத்தில் கால் வைத்தவுடனே உரைத்துவிட்டது.! 
கடுப்பெத்துறார் மை லார்ட்... 
  
**************************************** 
  
தோல்வியின் விரக்தியில் கடவுளைச் சபிக்கும் உங்களில் எத்தனை பேர், 
வெற்றியின் பெருமிதத்தில் நன்றி சொல்லியிருப்பீர்கள்? 
  
*********************************** 
  
ரஜினி., சில படங்களில், ஒரே பாடலில் பெரிய ஆளாகிவிடுவார்! 
அவர் மருமகன், உண்மையிலேயே, ஒரே பாடலில் பெரிய ஆளாகிவிட்டார். 
  
************************************* 
  
பத்து மணி நேரம் தூங்குவது சோம்பேறித்தனம் அல்ல. 
ஒரு மணி நேரம் தூங்காமல் சும்மாவே படுத்திருப்பது தான் சோம்பேறித்தனம். 
  
************************************** 
  
சென்னையில் நிழலுக்கு ஒதுங்குகிரவர்களை விட, 
காதலுக்கு ஒதுங்குகிரவர்களே அதிகம். 
  
***************************** 
  
வாழ்க்கையில், நாம தப்பு பண்ணிட்டா ஒரு பத்து நிமிஷம் கண்ண மூடிகிட்டு பொறுமையா யோசிக்கணும்... 
பழிய யார் மேல போடலாம்னு... 
  
******************************** 
  
வளர்ச்சி என்பது... அப்பாவின் திட்டுக்கு கடுப்பாவதில் தொடங்கி... 
மானேஜரின் திட்டுக்கு அமைதியாக நிற்பதில் முடிகிறது. 
  
********************************* 
  
கோபத்தை கட்டுபடுத்த , அது வரும்போது ஒன்னு முதல் பத்து வர தல கீழா என்னனுமாம். கேக்கும்போதே செம கோவம் வருது! 

*********************************** 
  
தேர்வில்... தெரியாத விடைக்கு தலையை சொரிபவனை விட., 
முன்னிருப்பவனின் முதுகை சொரிபவனே தேர்ச்சியடைகிறான்!   *********************************** 
  
பொண்ணுங்க., நான் தூங்க போறேன்னு ஸ்டேடஸ் போட்டா கூட 100 கமண்ட்ஸ், 500 லைக் வருது. 
ஆம்பளைங்க., நான் தொங்க போறேன்னு போட்டா... கயிறு இருக்கா இல்ல வாங்கி தரட்டா ன்னு தான் பதில் வருது. 
  
*********************************** 
  
உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். 
உங்களாலேயே அதை இரகசியமாய் வைக்க முடியாத பொது, மற்றவர்களால் எப்படி முடியும்? 
  
**************************************** 
  
உண்மையை உளறிவிட்டேனே என்கிற போதுதான் உண்மையிலேயே உளறிவிடுகிராய்!

No comments:

Post a Comment