Monday, September 3, 2012

நேர்,அறிந்த,அறியாத விளக்கம் "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"


"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால்
கல்லைக் காணோம்!!"

நேர் விளக்கம்:

நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும்
போது கல்லைக் காணவில்லை. பிறகு கல் கிடைக்கும்
போது பார்த்தால் நாயைக் காணவில்லை.

அறிந்த விளக்கம் :

உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள்
கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும்.
அறியாத விளக்கம் :
இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய்
என்றாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.
இதன் விளக்கம்,
நாயகன் = கடவுள்
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".
கல்லால் செதுக்கப் பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள்
பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும்
போது அங்கே கடவுளை பார்க்க மாட்டீர்கள்.
அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்
போது கல்லை பார்க்க மாட்டீர்கள்.
திருமூலர் சொன்னதைப் பாருங்கள்
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
---------------
தேக்கு மரத்தில் கலை வல்லான் ஒருவன் மிக
நேர்த்தியாக யானை உருவத்தைச்
செதுக்கி வைத்துள்ளான். இரு நண்பர்கள் அதனைப்
பார்க்கிறார்கள்
ஒருவன் 'அடேயப்பா! எவ்வளவு அழகான யானை?'
என்கிறான். அடுத்தவன் 'இது தேக்குமரம்' என்கிறான்.
யானையாகப் பார்த்தவனுக்கு மரம் தெரியவில்லை.
மரமாகப் பார்த்தவனுக்கு யானை தெரியவில்லை..

No comments:

Post a Comment