Wednesday, May 8, 2013

நீ என் அம்மா தானா?


நீ என் அம்மா தானா?
................................................................................

அம்மா,

நீ இப்போ எங்க இருக்கனு தெரியல

எப்படி இருக்கனும் தெரியல

நீ எனக்கு அம்மா தானானும் தெரியல

ஏன்னு கேக்குறியா?

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து
நீ பொட்ட புள்ள,
வீட்டுக்குள்ள முடங்கி கிடக்கனும்னு
கண்டிச்சு வளக்கல...

பத்து பாத்திரம் தேய்,
வீட்ட பெருக்குன்னு ஒருநாளும்
தொடப்பத்த கைல கொடுத்ததில்ல...

ரெத்த தான முகாம்,
எயிட்ஸ் அவேர்னஸ் ப்ரோக்ராம்னு சுத்துறியே,
அதெல்லாம் விட்டுட்டு
பொறுப்பா கோயிலுக்கு போ,
டைப்ரைட்டிங், தையல் கிளாஸ்னு போன்னு
அறிவுர சொன்னதில்ல...

ஆம்பள பசங்க கிட்ட
பாத்து பழகுடினு கூட சொன்னதில்ல...

உன்கிட்ட வெளக்கம்
கேக்குறவங்க கிட்டல்லாம்
நீ சொல்றதெல்லாம்
எம்பொன்னுக்கு எல்லாம் தெரியும்,
அவ பாத்துப்பானு தான்...

பாத்துப்பா பாத்துப்பானு
சொன்னதோட இல்லாம,
படக்குன்னு விட்டுட்டும் போயிட்ட...

இல்ல, நான் தெரியாம தான் கேக்குறேன்,
அப்படி எனக்கு என்ன தெரிஞ்சி போச்சின்னு
என்ன விட்டுட்டு போன?

ஒரு நாளாவது பல்லு தேய்க்க விட்டுருப்பியா?
ஒரு கையில ப்ரெசும்
இன்னொரு கைல ஜூஸுமால
எழுப்பி விடுவ...

அட, எதுக்கு தான் எனக்கு கையில
அஞ்சு விரலு இருக்கோ,
ஒரு நாளாவது நீயே சாப்டுடினு
சொல்லியிருப்பியா?

அதெல்லாம் விடு,
ரோட்டுல போறப்பலாம்
ஏதாவது பையன கண்டா மக்கா
இவன் எப்படிடி இருக்கானு
எதோ விளம்பர கம்பனிக்கு
ஆள் தேடுற மாதிரியே
தொனதொனப்பியே
உனக்கே இதெல்லாம் நியாயமா தெரியுதா?

வா போன்னு உன்ன
மரியாத இல்லாம கூப்புடுராளே,
இவ தான் ஒம்பொன்னான்னு கேக்குரவங்ககிட்ட
இல்லல, இவ என் ப்ரெண்ட்னு
தோள கட்டிக்கிட்டு
நிமிர்ந்து பார்த்து பெரும வேற...

ஆங்... ஒண்ணு நியாபகம் வந்துடிச்சி...
உனக்கும் அப்பாவுக்கும் இடையில
ஓடி நான் வந்து உக்காந்தா,
என் புருசன் கிட்ட நான்தான் இருப்பேன்னு
தள்ளி விட்டுட்டு அப்புறமா அணைச்சுப்ப...
பொறாம புடிச்சவளே...

ராத்திரி நேரத்துல நான் தூங்கிட்டேன்னு
நினச்சி கைவிரல பிடிச்சிகிட்டே
நெத்தில முத்தம் குடுப்ப,
இப்ப யாரு குடுப்பானு
நெனச்சு பாத்தியா?

ம்க்கும்... நீயில்லன்னு நான் ஒண்ணும்
பொலம்பல என்ன...
இப்போ நான் தான் இங்க
எல்லோருக்கும் எல்லாமே...

நீ இல்லாம எனக்கு எல்லாமே இருக்கு,
ஆனா எதுவுமே இல்ல..


உணர்வுகள்
நீ என் அம்மா தானா?
................................................................................

அம்மா,

நீ இப்போ எங்க இருக்கனு தெரியல

எப்படி இருக்கனும் தெரியல

நீ எனக்கு அம்மா தானானும் தெரியல

ஏன்னு கேக்குறியா?

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து 
நீ பொட்ட புள்ள, 
வீட்டுக்குள்ள முடங்கி கிடக்கனும்னு
கண்டிச்சு வளக்கல...

பத்து பாத்திரம் தேய், 
வீட்ட பெருக்குன்னு ஒருநாளும் 
தொடப்பத்த கைல கொடுத்ததில்ல...

ரெத்த தான முகாம், 
எயிட்ஸ் அவேர்னஸ் ப்ரோக்ராம்னு சுத்துறியே, 
அதெல்லாம் விட்டுட்டு 
பொறுப்பா கோயிலுக்கு போ, 
டைப்ரைட்டிங், தையல் கிளாஸ்னு போன்னு 
அறிவுர சொன்னதில்ல...

ஆம்பள பசங்க கிட்ட 
பாத்து பழகுடினு கூட சொன்னதில்ல...

உன்கிட்ட வெளக்கம் 
கேக்குறவங்க கிட்டல்லாம்
நீ சொல்றதெல்லாம் 
எம்பொன்னுக்கு எல்லாம் தெரியும், 
அவ பாத்துப்பானு தான்...

பாத்துப்பா பாத்துப்பானு 
சொன்னதோட இல்லாம, 
படக்குன்னு விட்டுட்டும் போயிட்ட...

இல்ல, நான் தெரியாம தான் கேக்குறேன், 
அப்படி எனக்கு என்ன தெரிஞ்சி போச்சின்னு
என்ன விட்டுட்டு போன?

ஒரு நாளாவது பல்லு தேய்க்க விட்டுருப்பியா?
ஒரு கையில ப்ரெசும் 
இன்னொரு கைல ஜூஸுமால 
எழுப்பி விடுவ...

அட, எதுக்கு தான் எனக்கு கையில 
அஞ்சு விரலு இருக்கோ, 
ஒரு நாளாவது நீயே சாப்டுடினு 
சொல்லியிருப்பியா?

அதெல்லாம் விடு, 
ரோட்டுல போறப்பலாம் 
ஏதாவது பையன கண்டா மக்கா 
இவன் எப்படிடி இருக்கானு 
எதோ விளம்பர கம்பனிக்கு 
ஆள் தேடுற மாதிரியே
தொனதொனப்பியே 
உனக்கே இதெல்லாம் நியாயமா தெரியுதா?

வா போன்னு உன்ன 
மரியாத இல்லாம கூப்புடுராளே, 
இவ தான் ஒம்பொன்னான்னு கேக்குரவங்ககிட்ட 
இல்லல, இவ என் ப்ரெண்ட்னு 
தோள கட்டிக்கிட்டு 
நிமிர்ந்து பார்த்து பெரும வேற...

ஆங்... ஒண்ணு நியாபகம் வந்துடிச்சி...
உனக்கும் அப்பாவுக்கும் இடையில
ஓடி நான் வந்து உக்காந்தா,
என் புருசன் கிட்ட நான்தான் இருப்பேன்னு 
தள்ளி விட்டுட்டு அப்புறமா அணைச்சுப்ப... 
பொறாம புடிச்சவளே...

ராத்திரி நேரத்துல நான் தூங்கிட்டேன்னு 
நினச்சி கைவிரல பிடிச்சிகிட்டே 
நெத்தில முத்தம் குடுப்ப, 
இப்ப யாரு குடுப்பானு 
நெனச்சு பாத்தியா?

ம்க்கும்... நீயில்லன்னு நான் ஒண்ணும் 
பொலம்பல என்ன...
இப்போ நான் தான் இங்க 
எல்லோருக்கும் எல்லாமே...

நீ இல்லாம எனக்கு எல்லாமே இருக்கு, 
ஆனா எதுவுமே இல்ல..


உணர்வுகள்

No comments:

Post a Comment