Wednesday, February 20, 2013


ஒருமுறை நாராயணாசாமி தனது மனைவியுடன் ஒரு டெல்லிக்கு சென்றார்.

ஒரு இடத்தில் டெல்லியை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.

நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.நாராயணாசாமிக்கும் அவர் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.

அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க, அவர்கள் "வேண்டாம்" என்றனர்.

அவரும் விடாமல்,

"நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம். ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,''என்றார்.

உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர். ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.

குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார். ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை.

கீழே இறக்கியதும் விமானி அந்தக் நாராயணாசாமியிடம்,

"எப்படிங்க, நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.

அதற்கு நாராயணசாமி பெருமையாக,

"எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன்" என்றார்.

"எந்த தருணத்தில்...?" என்று விமானி கேட்க,

நாராயணாசாமி சொன்னார்,

"என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது"
ஒருமுறை நாராயணாசாமி தனது மனைவியுடன் ஒரு டெல்லிக்கு சென்றார்.

ஒரு இடத்தில் டெல்லியை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.

நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.நாராயணாசாமிக்கும் அவர் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.

அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க, அவர்கள் "வேண்டாம்" என்றனர்.

அவரும் விடாமல்,

"நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம். ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,''என்றார்.

உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர். ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.

குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார். ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை.

கீழே இறக்கியதும் விமானி அந்தக் நாராயணாசாமியிடம்,

"எப்படிங்க, நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.

அதற்கு நாராயணசாமி பெருமையாக,

"எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன்" என்றார்.

"எந்த தருணத்தில்...?" என்று விமானி கேட்க,

நாராயணாசாமி சொன்னார்,

"என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது"

No comments:

Post a Comment