Wednesday, February 27, 2013

உங்களின் ரூ 100 க்கும் அவர்களிடம் மதிப்பு உண்டு


யாரோ ஒருவர் இந்த குழந்தைகளுக்கு தன்னால் முடிந்ததை உதவினால் அதில் நம்பங்கும் உண்டு என்ற சந்தோசத்தில் மட்டுமே எழுதுகிறேன்...

ஒருநிமிடம் நமக்கு உறவுகள் என்று யாருமில்லை என்று கற்பனை செய்து பார்த்துவிட்டு பிறகு படியுங்கள்...

எங்கள் திருமணநாள் அன்று ஒரு ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் இருப்பவர்களுக்கு ஒரு வேலை அன்னதானம் வழங்கலாமென்று முடிவெடுத்து இன்று சென்றிருந்தோம். அங்கு இருந்தவர்கள் எல்லாம் தன்னை பெற்றவர்கள் யாரென்றே தெரியாத குழந்தைகளும், தான் பெற்ற குழந்தைகளால், உறவுகளால் கைவிடப்பட்ட முதியோர்கலுமே (இதில் ஊனமுற்ற குழந்தைகளும் முதியவர்களும் உண்டு). இதை ( மத்திய அரசின் அனுமதியுடன் ) நிறுவி, 9 வருடங்களாக தனது சொந்த ஆர்வத்தால் நடத்தி வருபவர் * P . சக்திவேல்* எனும் தனி மனிதர்...

பணமிருந்தால் ஒருமாதத்திற்கு கூட நாம் அன்னதானம் அளிக்கலாம் ஆனால் மனமிருந்தால்தான் இதுபோல அமைப்புகளை நடத்தமுடியும் .( தற்போது 50 குழந்தைகள், 20 வயதானவர்களும் இந்த இல்லத்தில் இருகின்றனர்) குழந்தைகளின் அடிப்படை வசதி, பள்ளிக்கு அனுப்புவது, முதியவர்களின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் இவரே கவனிக்கிறார் . சில மனிதநேயங்களின் உதவியுடன்...

இது பெரிய ஆசிரமமோ , தொண்டு நிறுவனமோ கிடையாது ஒரு லிட்டர் பால் கூட தானமாக ஏற்கிறார்கள். சென்னை போன்ற மாநகரங்களில் இதுபோல் அமைப்புக்கு உதவ நிறைய பேர் இருகிறார்கள் கண்டிப்பாக நிறையபேர் உதவிருப்பீர்கள்...

எனக்கு இது புது அனுபவம் அதனால் உங்களுடன் பகிர்கிறேன் இதை படிக்கும் ஏதோ ஒரு மனிதநேயம் உதவநினைதால் கீழுள்ள முகவரியை, அலைபேசியை தொடர்புகொள்ளலாம் . உங்களின் ரூ 100 க்கும் அவர்களிடம் மதிப்பு உண்டு(சமையல் பொருள்கள், ஆடைகள் அனைத்தையும் பெறுகிறார்கள்...)

NOCOME TRUST"
#18, THENKARAI STREET, VADAMATTAM ROAD,
KARAIKAL - 609609
TEL: O4368- 266714, CELL 9047281743 ( Mr. P.SAKTHIVEL)

நன்றி : காரை செந்தில் குமார்.
இது லைக் , கமென்ட்க்காக எழுதி tag செய்யவில்லை. விருப்பமிருந்தால் ஷேர் செய்யுங்கள்...

யாரோ ஒருவர் இந்த குழந்தைகளுக்கு தன்னால் முடிந்ததை உதவினால் அதில் நம்பங்கும் உண்டு என்ற சந்தோசத்தில் மட்டுமே எழுதுகிறேன்...

ஒருநிமிடம் நமக்கு உறவுகள் என்று யாருமில்லை என்று கற்பனை செய்து பார்த்துவிட்டு பிறகு படியுங்கள்...

எங்கள் திருமணநாள் அன்று ஒரு ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் இருப்பவர்களுக்கு ஒரு வேலை அன்னதானம் வழங்கலாமென்று முடிவெடுத்து இன்று சென்றிருந்தோம். அங்கு இருந்தவர்கள் எல்லாம் தன்னை பெற்றவர்கள் யாரென்றே தெரியாத குழந்தைகளும், தான் பெற்ற குழந்தைகளால், உறவுகளால் கைவிடப்பட்ட முதியோர்கலுமே (இதில் ஊனமுற்ற குழந்தைகளும் முதியவர்களும் உண்டு). இதை ( மத்திய அரசின் அனுமதியுடன் ) நிறுவி, 9 வருடங்களாக தனது சொந்த ஆர்வத்தால் நடத்தி வருபவர் * P . சக்திவேல்* எனும் தனி மனிதர்...

பணமிருந்தால் ஒருமாதத்திற்கு கூட நாம் அன்னதானம் அளிக்கலாம் ஆனால் மனமிருந்தால்தான் இதுபோல அமைப்புகளை நடத்தமுடியும் .( தற்போது 50 குழந்தைகள், 20 வயதானவர்களும் இந்த இல்லத்தில் இருகின்றனர்) குழந்தைகளின் அடிப்படை வசதி, பள்ளிக்கு அனுப்புவது, முதியவர்களின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் இவரே கவனிக்கிறார் . சில மனிதநேயங்களின் உதவியுடன்...

இது பெரிய ஆசிரமமோ , தொண்டு நிறுவனமோ கிடையாது ஒரு லிட்டர் பால் கூட தானமாக ஏற்கிறார்கள். சென்னை போன்ற மாநகரங்களில் இதுபோல் அமைப்புக்கு உதவ நிறைய பேர் இருகிறார்கள் கண்டிப்பாக நிறையபேர் உதவிருப்பீர்கள்...

எனக்கு இது புது அனுபவம் அதனால் உங்களுடன் பகிர்கிறேன் இதை படிக்கும் ஏதோ ஒரு மனிதநேயம் உதவநினைதால் கீழுள்ள முகவரியை, அலைபேசியை தொடர்புகொள்ளலாம் . உங்களின் ரூ 100 க்கும் அவர்களிடம் மதிப்பு உண்டு(சமையல் பொருள்கள், ஆடைகள் அனைத்தையும் பெறுகிறார்கள்...)

NOCOME TRUST"
#18, THENKARAI STREET, VADAMATTAM ROAD,
KARAIKAL - 609609
TEL: O4368- 266714, CELL 9047281743 ( Mr. P.SAKTHIVEL)

நன்றி : காரை செந்தில் குமார்.

No comments:

Post a Comment