Wednesday, November 21, 2012

டெங்கு வராமல் தடுக்க




தற்போதைய சூழ்நிலையில் இன்று மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனை " டெங்கு காய்ச்சல் " என நவீன மருத்துவத்தால் சொல்லப் படும...
் ஒற்றைச்சொல்

இதற்கு காரணமான உயிரனம் " கொசுவாம் "

எனவே தமிழக அரசு மட்டுமல்ல, நவீன மருத்துவத்தாலும் அறிவுறுத்தப் படுவது :

1. சுற்றுப் புறங்களில் நீர் சேர விட வேண்டாமாம்
2. கொசு கடிக்காமல், கை கால் களைநன்றாகமூடி வைக்க வேண்டுமாம்
3. வைரஸ் நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும்.அதனால், நோயாளிகள், கொசுவலைக்குள் சுகம் ஆகும் வரை வைக்கவேண்டும்.
4.முகக் கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டுமாம்
5 கொசுக்களை அழித்து விட இரசாயன புகை வேண்டுமாம்
மேலும் பற்பல கதைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு அதிகாரிகளையும் கூற வைத்துக் கொண்டிருக்கிறது.


அவர்களுக்கும், பொது மக்களுக்கும் எழுப்பப் படும் முக்கிய கேள்வி?

1. நரிக் குறவர்கள், மலை வாழ்மக்கள் ஆகியோர் கொசுவோடு வாழ்கிறார்களே அவர்களுக்கு என்றாவது இது போன்று வந்ததுண்டா?

2. கொசுக்களை அழிக்க இரசாயன புகை அடித்து அதை கொல்ல முடியுமா? ( அது இரவு உயிரனம் ). அந்த புகையால் கொசுவை உண்ணும் தட்டானும், சுவாசக் கோளாரால் மனிதனும் தான் பாதிக்கப் பட்டான் என்பது தெரியுமா?

3. கொசு என்பது உணவு சங்கிலியிலுள்ள தட்டான், தவளை, சிட்டுக்குருவி, மீன் மற்றும் பல உயிரனங்களின் உணவு . இதை மட்டும் அழித்து விட்டால் உணவு சங்கிலியில் ஒரு கன்னி விலகி விடாதா?

4. நாம் சுவாசிக்கும் காற்றில் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்கிறதே அதை சுவாசிக்கும் போது உடலில் வைரஸ் கிருமி பரவி பாதிப்பை ஏற்படுத்தாதா? முகக் காவசத்தால் நாம் பாதுகாக்கப் படுகிறோமாம்?

5. குருதியை தானமாகப் பெற்று அதை நோயாளிக்கு
செலுத்தினால் சரியாகி விடுமா?


டெங்கு மட்டுமல்ல, எந்த ஒரு நோயானலும் அதற்கு முக்கியமான காரணம் " நோய் எதிர்ப்பு சக்தி " நம்மிடம் இல்லை என்று தான் பொருள்.

அதை சரி செய்வது மட்டுமே சிறந்த வழி.

அதற்கு நில வேம்பு கஷாயம் தினமும் -காலை மாலை 100 மிலி வெறும் வயிற்றில் எடுத்து கொண்டால் டெங்கு முதலான வைரசினால் பரவக்கூடிய காய்ச்சலை தடுத்து விட முடியும் ..

டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய இடத்தில் உள்ளவர்கள் ,,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

இந்த நில வேம்பு கஷாயம் -குடிநீர் எளிதாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் -சித்த மருத்துவ பிரிவில் -இலவசமாக கிடைக்கும்

நில வேம்பு கஷாயம் கசப்பு சுவை உடையது ..கசப்பை தாங்காதவர்கள் பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம் ..அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம் .

மேலும் மாதுளை, ஆரஞ்சு, நெல்லி போன்றவைகளை உண்ணும் போதும் " நோய் எதிர்ப்பு சக்தி " அதிகரித்து சிக்கலில் இருந்து விடுபட முடியும்.

மேலும் விபரங்களுக்கு : 93674 21787 ( மாறன் ஜி, சிவகாசி ) 98430 77693 ( கிரிதரன்)

No comments:

Post a Comment