Friday, April 26, 2013

"ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும்" -சித்தர் தேரையர்-




கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு சித்தர் தேரையர் பாடல் பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!
"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"
-சித்தர் தேரையர்-

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு சித்தர் தேரையர் பாடல் பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

கோடையை குளிர்ச்சியாக்க நுங்கு சாப்பிடுங்க...

கோடையை குளிர்ச்சியாக்க நுங்கு சாப்பிடுங்க...


இயற்கையாய் படைக்கப்பட்ட அனைத்தும் நமக்கு அளிக்கப்பட்ட வரம் என்றே சொல்ல வேண்டும். இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை

அளிப்பதில் ஆற்றல் மிக்கது. கோடை காலம் வந்துவிட்டாலே நமக்கு நியாபகம் வருவது நுங்கு தான். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை

தரக்கூடியதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

குளிர்ச்சி நிறைந்த நுங்கு

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள்

நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நுங்கை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை

அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும்.

ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள்

முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு,

பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

பதநீரும் நுங்கும்

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். பனை

மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான்.

எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு

தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.

கோடை வெயிலை தவிர்க்க நுங்கு சாப்பிடுங்க. நுங்கில் சத்துகள் நிறைந்து உள்ளன.
கோடையை குளிர்ச்சியாக்க நுங்கு சாப்பிடுங்க...


இயற்கையாய் படைக்கப்பட்ட அனைத்தும் நமக்கு அளிக்கப்பட்ட வரம் என்றே சொல்ல வேண்டும். இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை 

அளிப்பதில் ஆற்றல் மிக்கது. கோடை காலம் வந்துவிட்டாலே நமக்கு நியாபகம் வருவது நுங்கு தான். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை 

தரக்கூடியதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

குளிர்ச்சி நிறைந்த நுங்கு

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் 

நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நுங்கை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை 

அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். 

ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் 

முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, 

பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

பதநீரும் நுங்கும்

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். பனை 

மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான். 

எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு 

தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும். 

கோடை வெயிலை தவிர்க்க நுங்கு சாப்பிடுங்க. நுங்கில் சத்துகள் நிறைந்து உள்ளன.

மனஅழுத்தம் போக்கும் “இஞ்சி டீ”!

மனஅழுத்தம் போக்கும் “இஞ்சி டீ”!

இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி இடம் உண்டு. மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒருகப் இஞ்சி டீ சாப்பிடுங்கள் கவலை காணாமல் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் மனஅழுத்தம் போக்கும் நிவாரணியாகவும் இஞ்சி டீ திகழ்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

கவலை நிவாரணி

இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கல ந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ரசா யனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவ லை ஏற்படும் போது இஞ்சி டீ குடியு ங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

மன அழுத்தம் போக்கும்

மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக் கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகி றது. இம்மாதிரி நிலைகளில் வெந் நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபு ணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜீரணசக்தி கிடைக்கும்

மேலும் நாக்கின் ருசி சம்பந்த மான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்கு விக்கிறது. மலச்சிக்கல், அழற் சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச் சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழ ற்சியையும் கட்டுக் கோப்பாக வைக்கிறது.

எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போ தும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக் தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற் படும் தசைப்பிடிப்பைப் போக்க இஞ்சி சாற்றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற்றின்மீது வைத்துக்கொண்டால் பெரிய அ ளவுக்கு நிவாரணம் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மனஅழுத்தம் போக்கும் “இஞ்சி டீ”!

இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி இடம் உண்டு. மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒருகப் இஞ்சி டீ சாப்பிடுங்கள் கவலை காணாமல் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் மனஅழுத்தம் போக்கும் நிவாரணியாகவும் இஞ்சி டீ திகழ்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

கவலை நிவாரணி

இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கல ந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ரசா யனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவ லை ஏற்படும் போது இஞ்சி டீ குடியு ங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

மன அழுத்தம் போக்கும்

மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக் கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகி றது. இம்மாதிரி நிலைகளில் வெந் நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபு ணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜீரணசக்தி கிடைக்கும்

மேலும் நாக்கின் ருசி சம்பந்த மான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்கு விக்கிறது. மலச்சிக்கல், அழற் சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச் சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழ ற்சியையும் கட்டுக் கோப்பாக வைக்கிறது.

எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போ தும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக் தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற் படும் தசைப்பிடிப்பைப் போக்க இஞ்சி சாற்றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற்றின்மீது வைத்துக்கொண்டால் பெரிய அ ளவுக்கு நிவாரணம் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

யார் இந்த நேதாஜி....???

ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லை,அவன் அந்த தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான்.

அப்படியான ஒரு விடுதலை வீரன் தான் நேதாஜி,நேதாஜி என அழைக்கப்படும் விடுதலை வீரன் “நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்” ஆவார்.

ஈழத்து வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவர் தனது ஆத்மார்த்த குருவாக இவரையே தன் நெஞ்சில் ஏற்றுக்கொண்டாதாக நம் வரலாறு பெருமைப்பட்டுகொள்ளுகிறது.

யார் இந்த நேதாஜி....

அவசரக்காரர்-ஆத்திரக்காரர் என்று கூறினார் மகாத்மா காந்தி
படபடப்பானவர்-பண்படாதவர் என்று கூறினார் ஜவகர்லால் நேரு அவர்கள்

ஆனால் வரலாறு ஏற்றுக்கொண்டது அவன் ஒரு

விடுதலை வீரன்

கொள்கை வீரன் என்று.

தாய் நாட்டின் விடுதலைக்காக தனது 24 வயதில் I.C.S என்ற உத்தியோகத்தை துாக்கி எறி்தார்.

35 வயதில் தனக்கு சொந்தமாக இருந்த கட்டாக் நகரில் தான் பிறந்த மாளிகையை தேசத்திற்காக அர்பணித்தார்.

42 வயதில் தான் தலைமை தாங்கியிருந்த அகில இந்திய காங்கிரஸ் பதவியை துாக்கி எறிந்தார்.

44 வயதில் தன் தேச விடுதலைக்காக தாய் நாட்டை விட்டு பிரிந்து அயல்தேசம் சென்றார்.

இப்படியாக தனது தேசத்தின் விடுதலைக்காக முழுமையாக அர்பணிப்புடன் போராடிய ஒரு விடுதலை வீரன் இவன்.

தேசத்தை விட்டு வெளியேறி இருப்பினும் கொண்ட கொள்கையில் ஒரு உறுதியுடன் அன்றைய உலக ஒழுங்கை நன்கு விளங்கிக் கொண்டு அதனை தனது தேசத்தின் விடுதலைக்காக மாற்றியமைத்த ஒரு அரசியல் தலைவனும் கூட இவன்.

தன் உயிரையே பணயம் வைத்து ஜேர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் கூட இந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களே.!
ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லை,அவன் அந்த தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான்.

அப்படியான ஒரு விடுதலை வீரன் தான் நேதாஜி,நேதாஜி என அழைக்கப்படும் விடுதலை வீரன் “நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்” ஆவார்.

ஈழத்து வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவர் தனது ஆத்மார்த்த குருவாக இவரையே தன் நெஞ்சில் ஏற்றுக்கொண்டாதாக நம் வரலாறு பெருமைப்பட்டுகொள்ளுகிறது.

யார் இந்த நேதாஜி....

அவசரக்காரர்-ஆத்திரக்காரர் என்று கூறினார் மகாத்மா காந்தி
படபடப்பானவர்-பண்படாதவர் என்று கூறினார் ஜவகர்லால் நேரு அவர்கள்

ஆனால் வரலாறு ஏற்றுக்கொண்டது அவன் ஒரு

விடுதலை வீரன்

கொள்கை வீரன் என்று.

தாய் நாட்டின் விடுதலைக்காக தனது 24 வயதில் I.C.S என்ற உத்தியோகத்தை துாக்கி எறி்தார்.

35 வயதில் தனக்கு சொந்தமாக இருந்த கட்டாக் நகரில் தான் பிறந்த மாளிகையை தேசத்திற்காக அர்பணித்தார்.

42 வயதில் தான் தலைமை தாங்கியிருந்த அகில இந்திய காங்கிரஸ் பதவியை துாக்கி எறிந்தார்.

44 வயதில் தன் தேச விடுதலைக்காக தாய் நாட்டை விட்டு பிரிந்து அயல்தேசம் சென்றார்.

இப்படியாக தனது தேசத்தின் விடுதலைக்காக முழுமையாக அர்பணிப்புடன் போராடிய ஒரு விடுதலை வீரன் இவன்.

தேசத்தை விட்டு வெளியேறி இருப்பினும் கொண்ட கொள்கையில் ஒரு உறுதியுடன் அன்றைய உலக ஒழுங்கை நன்கு விளங்கிக் கொண்டு அதனை தனது தேசத்தின் விடுதலைக்காக மாற்றியமைத்த ஒரு அரசியல் தலைவனும் கூட இவன்.

தன் உயிரையே பணயம் வைத்து ஜேர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் கூட இந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களே.!

இயற்கை தந்த மூலிகை மருந்து குற்றாலம்..!





இயற்கை தந்த மூலிகை மருந்து குற்றாலம்..!

குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி. பசுமையான மலைத்தொடரும், அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். தென் தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க அருவி நகரான குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

குற்றால சீசன் காலம்

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம்.

தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலத்தில் குற்றாலத்தில் தங்கியிருந்து அந்த இதமான சாரலை அனுபவிப்பது பொன்னான அனுபவம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலமே "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்கள் மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் அதற்கேற்ற உடைகளை எடுத்துச் செல்வது நல்லது.

மூலிகைகளும், பழவகைகளும்

இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.

குற்றாலம் அருவியில் குளிப்பது என்பது குதூகலமான ஒன்று என்பதையும் விட, இந்த அருவிக்கு மருத்துவ குணம் இருப்பதும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.

குற்றாலம் அருவி

குற்றாலம் அருவி
அமைவிடம் தென்காசி
ஆள்கூறு 8.9217° N 77.2786° E
மொத்த உயரம் 290 அடி

குற்றால அருவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டகுற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படுகிறது.

இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒன்பது அருவிகள்

குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.


7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.

9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.

இன்றைய விவசாயத்தின் நிலைமை ::

இன்றைய விவசாயத்தின் நிலைமை ::


நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உன்னகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவ்வில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....

பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....

iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....

விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _ உண்மை
இன்று புரியாது.



- வை . நடராஜன்
இன்றைய விவசாயத்தின் நிலைமை ::


நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உன்னகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில் 
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவ்வில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....

பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....

iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....

விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _ உண்மை
இன்று புரியாது.



- வை . நடராஜன்

மகாகவி பாரதி பிறந்த வீடு.

மகாகவி பாரதி பிறந்த வீடு.
மகாகவி பாரதி பிறந்த வீடு.

பழனி இரவுஒளியில் ....

பழனி இரவுஒளியில் ....
பழனி இரவுஒளியில் ....

நிச்சயமாக இது ஒரு வரப்பிரசாதம்......



ஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் - IBM'ன் புதிய 3 இன் 1 சோலார் தொழில்நுட்பம்:

IBM's 3 in 1 Solar Invention can give Electricity / Water / Air-Conditioning - 3 இன் 1 சோலார் கண்டுபிடிப்பு / ஒரே நேரத்தில் அதிக மின்சாரம், தூய குடிதண்ணீர், மற்றும் குளிர்ந்த காற்று கிடைக்கும் வசதி - செலவும் மிக மிக குறைவு

உலகத்தில் பல சோலார் கண்டுபிடிப்பு வந்தாலும் அது மிக ஸ்லோவாக தான் நடை முறை படுத்தும் காரணம் அதன் விலை. சோலார் எனர்ஜியை மின்சாரமாக மாற்றுவதற்க்கு கண்ணாடி, சிலிக்கான் போன்ற பல மினிரல்கள் சேர்த்து தான் ஃபொட்டோ வால்ட்டிக் என்னும் சோலார் கன்வெர்ஷன் செய்து மின்சாரம் பெறப்படுகிறது. இப்போது ஐபிஎம் ஒரு புது வகை சோலார் டெக்னாலஜியை கன்டுபிடித்துள்ளது. இதற்க்கு பெயர் High Concentration PhotoVoltaic Thermal (HCPVT) இதன் மூலம் ஒரு சென்டிமீட்டர் சிப்பில் 2000 மடங்கு சூரிய சக்தி கிடைக்கும் அளவுக்கு மிகவும் எளிதான சில மெட்டல்கள் மூலம் அமைத்துள்ளனர்.

இதில் 30% சூரிய சக்தியை மின்சாரக மாற்றியும் மீதி உள்ள சூடில் உப்பு தண்ணீரை சேலினேட் முறையில் நல்ல தண்ணீராக மாற்றியும் மிச்சம் உள்ள எனர்ஜியில் குளிர்ந்த காற்று கிடைக்குமாறு 3 இன் 1 ஆக அமைத்திருக்கிறார்கள்.
அதாவது பொதுவாக இப்போது உள்ள ஒரு முழு சோலார் ஃபோட்டோவால்டிக் பிளேட் மூலம் 300 வாட்ஸ் கிடைக்கும் ஆனால் இங்கு 1 சென்டி மீட்டரில் 200 முதல் 250 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். ஒரு இரண்டடிக்கு இரண்டி இருந்தால் முழு வீட்டுக்கு 8 மணி நேர சூரிய சக்தியில் 24 மணி நேரமும் கிடைக்கும் என்றால் பெரிய கண்டுபிடிப்பு தான். அதாவது ஒரு ஊருக்கே ஒரு டிஷ் போது. இவர்கள் சஹாரா பாலைவனத்தில் 2% சதவிகித இடம் கொடுத்தால் உலகத்தின் மொத்த மின்சார தேவையும் எந்த ஒரு எனர்ஜி இல்லாமல் 100% கிடைக்குமாம்.
இதை அமைக்க வெறும் 12,500 ரூபாய் தான் ஒரு ஸ்கொயர் மீட்டருக்கு ஆகும் செலவு அது போக 1000 யூனிட் கரென்ட்டுகு வெறும் 5 ரூபாய் தான் செலவு.கூடவே தண்ணீர் பஞ்சம் மற்றூம் இயற்கை ஏசி வேறு கிடைக்கும் மக்களே.

நிச்சயமாக இது ஒரு வரப்பிரசாதம்......

via - Ravi Nag
நிச்சயமாக இது ஒரு வரப்பிரசாதம்......

ஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் - IBM'ன் புதிய 3 இன் 1 சோலார் தொழில்நுட்பம்:

IBM's 3 in 1 Solar Invention can give Electricity / Water / Air-Conditioning - 3 இன் 1 சோலார் கண்டுபிடிப்பு / ஒரே நேரத்தில் அதிக மின்சாரம், தூய குடிதண்ணீர், மற்றும் குளிர்ந்த காற்று கிடைக்கும் வசதி - செலவும் மிக மிக குறைவு

உலகத்தில் பல சோலார் கண்டுபிடிப்பு வந்தாலும் அது மிக ஸ்லோவாக தான் நடை முறை படுத்தும் காரணம் அதன் விலை. சோலார் எனர்ஜியை மின்சாரமாக மாற்றுவதற்க்கு கண்ணாடி, சிலிக்கான் போன்ற பல மினிரல்கள் சேர்த்து தான் ஃபொட்டோ வால்ட்டிக் என்னும் சோலார் கன்வெர்ஷன் செய்து மின்சாரம் பெறப்படுகிறது. இப்போது ஐபிஎம் ஒரு புது வகை சோலார் டெக்னாலஜியை கன்டுபிடித்துள்ளது. இதற்க்கு பெயர் High Concentration PhotoVoltaic Thermal (HCPVT) இதன் மூலம் ஒரு சென்டிமீட்டர் சிப்பில் 2000 மடங்கு சூரிய சக்தி கிடைக்கும் அளவுக்கு மிகவும் எளிதான சில மெட்டல்கள் மூலம் அமைத்துள்ளனர். 

இதில் 30% சூரிய சக்தியை மின்சாரக மாற்றியும் மீதி உள்ள சூடில் உப்பு தண்ணீரை சேலினேட் முறையில் நல்ல தண்ணீராக மாற்றியும் மிச்சம் உள்ள எனர்ஜியில் குளிர்ந்த காற்று கிடைக்குமாறு 3 இன் 1 ஆக அமைத்திருக்கிறார்கள்.
அதாவது பொதுவாக இப்போது உள்ள ஒரு முழு சோலார் ஃபோட்டோவால்டிக் பிளேட் மூலம் 300 வாட்ஸ் கிடைக்கும் ஆனால் இங்கு 1 சென்டி மீட்டரில் 200 முதல் 250 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். ஒரு இரண்டடிக்கு இரண்டி இருந்தால் முழு வீட்டுக்கு 8 மணி நேர சூரிய சக்தியில் 24 மணி நேரமும் கிடைக்கும் என்றால் பெரிய கண்டுபிடிப்பு தான். அதாவது ஒரு ஊருக்கே ஒரு டிஷ் போது. இவர்கள் சஹாரா பாலைவனத்தில் 2% சதவிகித இடம் கொடுத்தால் உலகத்தின் மொத்த மின்சார தேவையும் எந்த ஒரு எனர்ஜி இல்லாமல் 100% கிடைக்குமாம்.
இதை அமைக்க வெறும் 12,500 ரூபாய் தான் ஒரு ஸ்கொயர் மீட்டருக்கு ஆகும் செலவு அது போக 1000 யூனிட் கரென்ட்டுகு வெறும் 5 ரூபாய் தான் செலவு.கூடவே தண்ணீர் பஞ்சம் மற்றூம் இயற்கை ஏசி வேறு கிடைக்கும் மக்களே. 


via - Ravi Nag

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்?????

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.


இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்?????

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்!!!!!!



Thanks - Dheeran Dheeran
பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். 

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். 

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம். 

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது. 

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை. 


இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்?????

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்!!!!!!



Thanks - Dheeran Dheeran

Thursday, April 25, 2013

கிராமமும் பொருளாதாரமும்..!!!



பொருளாதாரத்தை பத்தி எழுத நானொன்னும் பொருளாதாரம் படிச்சவனும் இல்லை, பொருளாதார புத்திசீவியும் இல்லை. இருந்தாலும் நான் கண்டுணர்ந்த, வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படையில் இதை எழுதுகிறேன்.

கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்புன்னு சொன்னாய்ங்க., அது என்னவோ உண்மைதான் முதுகுபக்குட்டு இருக்கதாலதான் யாருமே பெரிசா அதை கண்டுக்கவில்லை போல!! பல தியாகங்களை பண்ணிட்டு இன்னைக்கு உருக்குலைந்து போயி நிக்குது கிராமங்கள். நகரமயமாக்கல், நாகரீமயமாக்கல், உலகமயமாக்கல் னு பல சுனாமிகள் தாக்கி இன்னைக்கு எலும்பும் தோலுமா விவசாயிகள் மட்டுமில்லை, கிராமங்களே அப்படிதான் இருக்கு பணம் பணம் பணம் எங்க பார்த்தாலும் அதுதான் பேச்சு., எங்களோட இயல்பே பெரும்பகுதி போச்சு, இன்னைக்கு பணம் இருந்தால்தான் எதுவுமே பண்ண முடியும்னு ஆகிடுச்சு.

சரியா 15 வருஷம் முன்னாடியெல்லாம் இப்படி இல்லை எங்கள் கிராமங்கள்., இன்னைக்கு எந்த வேலையென்றாலும் பக்கத்தில இருக்க மேலூர்க்கு வரணும் என்பதுதான் எங்களுக்கு நிலை. 15வருஷம் முன்னாடி நிலைமை அப்படி இல்லை என் கிராமம் ஒரு தன்னிறைவு பெற்ற கிராமம் தான். மேலூர்க்கு போறதே ஏதாவது அவசரவேலை இல்லை உயர்நிலைபள்ளியில் படிக்கும் பிள்ளைகள் இவர்கள் தான் செல்வர்.., மற்றவர்களுக்கு தேவையான அனைத்தும் என் கிராமத்துக்குள்ளயே இருந்தது விவசாய மட்டுமில்லை, அனைத்து வாழ்வியில் வேலைகளுக்கு உள்ளூரிலயே ஆட்கள் இருந்தனர். அனைவருக்குமே வேலை இருந்தது. மக்கள் தங்களை தாங்களே சார்ந்து இருந்தனர். 90% கிராமதேவைகள் அனைத்தும் உள்ளூரிலயே உற்பத்தி செய்யப்பட்டன. ஒருத்தர் மாற்றி ஒருத்தர் (ஒரு செயின் மாதிரி) சார்பு நிலைல இருந்தாங்க., எங்கள் கிராமங்களில் அப்போ பெரும் நிலக்கிழார்கள் னு யாரும் இல்லை ஓரளவு அனைத்து மக்களும் தங்கள் சுயதேவைக்கு நீர்ப்பாசன விளைநிலங்களும் அங்க அங்க மானாவாரி (வானம்பார்த்த பூமி) நிலங்களும் வைத்திருந்தனர். விவசாயத்தை நம்பிதான் என் கிராமம் விவசாய சார்பு தொழில்கள் அனைத்தும் இருந்தன.

விவசாய சார்பு தொழில்கள்.,

1,ஆடுமேய்த்தல் :- ஆடுமேய்த்தல் என்பது தனித்தனியே அவரவர் செய்தாலும் ஒரு சில குடும்பங்கள் இருந்தன முறைப்படி செய்ய ஆட்டுக்குட்டி வாங்கி அவர்களிடம் குடுத்தோம் என்றால் அவர்கள் வேலை அதை மேய்ச்சலுக்கு விட்டு வளர்ப்பது அந்த ஆடுகள் குட்டி போட்டால் பாதி பாதி 4குட்டி என்றால் ஆளுக்கு 2,அதையும் வளர்ப்பது அவர்கள் வேலையே.,இப்படி முதலீடு இல்லாமல் பெரும் ஆட்டுமந்தை அவர்கள் வசம் இருந்தது.,

2,மாடுவளர்த்தல் :- இந்த முறையில நாம மாடு வாங்கி விடுவது இல்லை ஆனால் அவர்களிடம் நிறைய மாடுகள் இருந்தன மாடு இல்லாத சம்சாரிகள்(விவசாயிகள்) தங்கள் விளைபொருள் கழிவுகளை (வைக்கோல்,உமி,புண்ணாக்கு) போன்றவற்றை அவர்களிடம் முழுவதும் கொடுத்துவிடுவார், அவர்கள் உழவுக்கு தேவையான நேரங்களில் மாடுகளையும்,பால் பொருட்களையும் குடுப்பர்,

3.தச்சர்:- (ஆசாரி) உழவுத்தேவையான பொருட்கள் செய்து கொடுப்பதில் இவர்களின் தேவை இன்றியமையாதது (கலப்பை, பரம்பு, மாட்டுவண்டி) சுருங்க சொன்னால் 365நாட்களும் வேலை இருந்து கொண்டே இருக்கும் இவர்களுக்கு அறுவடை முடிந்து ஏக்கருக்கு இத்தனை மூடை என்று கொடுத்துவிடுவர் இவர்களுக்கு.,

4.சலவைதொழிலாளி :- இவர்களும் கிராமங்களில் இருந்து பிரித்து பார்க்க முடியா அங்கத்தினர்கள்,மொத்தமாக அறுவடை முடிந்த பின்பு இவர்களுக்கு கூலிகளை நெல்லு மூடைகளில் கொடுத்து விடுவர்,

5.மருத்துவர்(சிகைதிருத்துபவர்):- இவர்களும் கிராமங்களில் இருந்து பிரித்து பார்க்க முடியா அங்கத்தினர்கள்,மொத்தமாக அறுவடை முடிந்த பின்பு இவர்களுக்கு கூலிகளை நெல்லு மூடைகளில் கொடுத்து விடுவர்

6.விவசாயகூலிகள் :- இவர்கள் தான் கிராமங்களின் முதுகெலும்புகள். விளைநிலங்கள் இல்லாதவர்கள் மட்டுமில்லை; சிறு, குறு விவசாயிகளும் இதில் அடக்கம். சிலர் பண்டமாற்று முறைகள் போல மாற்றி மாற்றி அடுத்தவர் வேலைகளை பகிர்ந்து கொள்வர்,
மேற்கூறிய வேலைகள் இல்லாமல் இன்னும் பல வேலைகள் ஒருங்கிணைந்ததுதான் கிராமங்கள், வேலைவாய்ப்பு என்பது பெரும்பாலும் உடலுழைப்பை கொண்டே இருந்தன. ஆனால் மக்களின் வாழ்க்கை முறைக்கு தேவையான அனைத்தும் தங்கள் கிராமங்களில் இருந்தே நிறைவு செய்யப்பட்டன.

இன்றைக்கு உணவுபொருட்களில் 100%மும் வணிகநிறுவனங்களை நம்பியே உள்ளன. ஆனால் 80-90களில் நான் பார்த்த வரை கிராமங்களில் ஒரு முறைபடுத்தா பண்டமாற்றுமுறை இருந்தது. காய்கறிகள், தானியங்கள், எண்ணைவித்துக்கள் அனைத்தும் எங்கள் கிராமங்களிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. தேவைக்கு அதிகமானதை விற்பனையும் தத்தம் சொந்தபந்தங்களிடம் இலவசமாக கொடுக்கப்பட்டன. உணவுபோருட்கள் மட்டுமில்லாமல் உடலுழைப்பையும் கூட மக்கள் இலவசமாக பரிமாறிக்கொண்ட காலம் அது. ஒரு வகையான சார்புநிலை, அங்கே சுயநலம் என்பது அவ்வளவாக இல்லாத காலம் அவை. நாளடைவில் விவசாயம் இலாபம் இல்லா தொழிலாக பார்க்கப்பட்டது உலகமயமாக்கள், விவசாயகூலிகள் நகரங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். கிராமத்தில் கிடைத்த வருமானத்தை விட பலமடங்கு கூடுதலாக கூலி அவர்களுக்கு கிடைக்க ஆரம்பித்தன. கிடைத்த பணத்தை வைத்து அவர்களால் அனைத்தையும் வாங்க முடிந்ததால் பெருமளவு விவசாய கூலிகள் விவசாயத்தை விடுத்து மாற்று வேலைகளை தேடி நகரங்களுக்கு படையெடுத்தனர். நகரங்களின் கவர்ச்சி அவர்களை கட்டிபோட்டது என்றே சொல்ல வேண்டும். விவசாய கூலிகள் இல்லாமல் விவசாயம் சிறுக சிறுக குறைய ஆரம்பித்தது ஒரு கண்ணி விலகியதால் கிராமங்களின் சார்பு தொழில்களும் நசிய ஆரம்பித்தது இன்று 90% கிராமவாசிகள் நகரத்தை சார்ந்தே இருக்கின்றன. 70-80% விவசாயம் கைவிட பட்டுள்ளது.,அன்று கிராமங்களிலேயே முடித்து கொண்ட தேவையை இன்று நகரங்களில் போய் உழைப்பை கொடுத்து தேவையை நிறைவு செய்கின்றனர்,ஆனால் உற்பத்தி!!!???? இதே நிலை நீடித்தால் அனைத்தையும் இறக்குமதி கொண்டே பூர்த்தி செய்யவேண்டும் எத்தனை நாளுக்கு அடுத்தவர்களை நம்பி வாழ்வது!!??

ஆளும்அரசுகள் பசப்பு வார்த்தைகளையும், எண்களில் வருட வளர்ச்சியை சொல்லி பெருமைபடுகின்றனர் ஆனால் விவசாயம் படுவேகமாக அழிந்து கொண்டு வருகின்றது என்று குப்பனுக்கும்,சுப்பனுக்கும் கூட தெரியும். இதையெல்லாம் விட நமது பாரதபிரதமர் விவசாயிகள் மாற்று வேலைகளை செய்யவேண்டும் என்று திருவாய் மலர்ந்துள்ளார், உணவுபொருட்களுக்கே 100% அடுத்த நாடுகளை நம்பி இருக்கும் நிலை வரலாம்!!!

வல்லரசு, பொருளாதார முன்னேற்றம், நிலாவுக்கு விண்கலம் எல்லாம் சரிதான்.. புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதை ஆகாமல் இருந்தா சரி.

ஏனென்றால் காகிதத்தையும், அணுகழிவுகளையும் திங்க நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.

எத்தனை குளிர் சாதனப் பெட்டி வந்தாலும் இத மிஞ்ச முடியுமா?

எத்தனை குளிர் சாதனப் பெட்டி வந்தாலும் இத மிஞ்ச முடியுமா?

வெயில் காலத்தில் நாம் வீட்டில் தயாரிக்கும் ஜூஸூக்கு மண் பானை நீர் சேர்த்து ஜூஸ் தயாரிக்கவும்.

ஐஸ் மற்றும் ப்ரிட்ஜ் நீரை தவிர்க்கவும் ஏனெனில் இவை இரண்டும் குடிக்கும் பொழுது ஜில் என்றிருந்தாலும். உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்தக்கூடியது.

மண் பானை நீர் உடம்புக்கும் நல்ல குளிர்ச்சி தரும்.
என்ன தான் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட தண்ணீரை குடித்தாலும் இயற்கையின் மூலம் கிடைக்கும் குளிர்ச்சிக்கும் புத்துணர்ச்சிக்கும் ஈடாக முடியுமா என்ன?

-நெல்லை களஞ்சியம்.
எத்தனை குளிர் சாதனப் பெட்டி வந்தாலும் இத மிஞ்ச முடியுமா?

வெயில் காலத்தில் நாம் வீட்டில் தயாரிக்கும் ஜூஸூக்கு மண் பானை நீர் சேர்த்து ஜூஸ் தயாரிக்கவும்.

ஐஸ் மற்றும் ப்ரிட்ஜ் நீரை தவிர்க்கவும் ஏனெனில் இவை இரண்டும் குடிக்கும் பொழுது ஜில் என்றிருந்தாலும். உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்தக்கூடியது.

மண் பானை நீர் உடம்புக்கும் நல்ல குளிர்ச்சி தரும்.
என்ன தான் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட தண்ணீரை குடித்தாலும் இயற்கையின் மூலம் கிடைக்கும் குளிர்ச்சிக்கும் புத்துணர்ச்சிக்கும் ஈடாக முடியுமா என்ன?

-நெல்லை களஞ்சியம்.

படித்ததில் பிடித்தது

மகாபாரத யுத்தத்தில் தன்னுடைய ஆசிரியர் துரோணரின் மீது அம்பு தொடுத்தான் அர்ச்சுனன்.

அந்தச் செய்தி கேட்டு ஏங்கி அழுதான் ஏகலைவன்.

“இந்தப் பாண்டவர்கள், எனக்கும், அவர்களுக்கும் ஆசிரியரான துரோணரைக் கொன்று விட்டார்களே!

என் கட்டை விரல் மட்டும் இருந்திருந்தால் என்
ஆசிரியரைக் காப்பாற்றியிருப்பேனே” என்று புலம்பினான்.

கட்டை விரலை துரோணர் கேட்டது அர்ச்சுனனுக்காக!

ஆனால் ஏகலைவன் அழுததோ துரோணருக்காக!

படித்ததில் பிடித்தது

மகாபாரத யுத்தத்தில் தன்னுடைய ஆசிரியர் துரோணரின் மீது அம்பு தொடுத்தான் அர்ச்சுனன்.

அந்தச் செய்தி கேட்டு ஏங்கி அழுதான் ஏகலைவன்.

“இந்தப் பாண்டவர்கள், எனக்கும், அவர்களுக்கும் ஆசிரியரான துரோணரைக் கொன்று விட்டார்களே!

என் கட்டை விரல் மட்டும் இருந்திருந்தால் என்
ஆசிரியரைக் காப்பாற்றியிருப்பேனே” என்று புலம்பினான்.

கட்டை விரலை துரோணர் கேட்டது அர்ச்சுனனுக்காக!

ஆனால் ஏகலைவன் அழுததோ துரோணருக்காக!

படித்ததில் பிடித்தது 


-Shahulhamid Hamid

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து.....

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்! ! ! !

மாதம்தோறும் மீட்டரில் கணக்குப்பார்த்து எழுதிவிட்டுப் போகும் மின்சாரத்துறை ஊழியர்களிடம்"இந்த மாதம் எத்தனை யூனிட் ஆகி இருக்கிறது?'' என்று கேட்பது ஒவ்வொரு குடும்பத்திலும் ­ உள்ள வழக்கமான கேள்வி. அதிலிருந்து மின்சார 'பில்' அந்த மாதம் எவ்வளவு ஆகும் என்று கணக்கிடுவதற்காக ­த்தான் அந்தக் கேள்வி. ஆனால், ஒரு யூனிட் மின்சாராத்தில் என்னென்ன செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து.....

2500 காலன் தண்ணீரை 50 அடி உயரம்பம்ப் செய்யலாம்.

40 வாட் விளக்கை 25 மணி நேரம் எரிக்கலாம்.

60 துண்டு ரொட்டிகளை வாட்டிச் சமைக்கலாம்.

நான்கு பேருக்கு சிற்றுண்டி தயார் செய்யலாம்.

ஆறு காலன் வெந்நீர் போட்டுக் குளிக்கலாம்.

ஆறு மணி நேரம் தரையைப் பாலிஷ் செய்யவோ சுத்தம் செய்யவோ உபயோகிக்கலாம்.

ஒரு தையல் மிஷினை 20 மணி நேரம் ஓட்டலாம்.

ஒரு சலவை மிஷினில் ஆறு பேர்களுடைய உடையை இரண்டு வாரங்களுக்கு வெளுக்கச் செய்யலாம்.

தலைக்கு மேல் சுற்றும் மின் விசிறியை 10 மணி நேரம் உபயோகிக்கலாம்.

180 பவுண்டு வெண்ணை எடுக்கலாம்.

2500 பால் புட்டிகளைக் கழுவலாம்.

இரண்டு காலன் தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.

பத்து பவுண்டு ஐஸ் கட்டி செய்யலாம்.



via - Aatika Ashreen

பசி

பசி இல்லாததுபோல
பாசாங்கு செய்வாள்
பிள்ளையின் பசி போக்க
பட்டினியாய் கிடப்பாள்

கடவுள் இல்லை என்று
எப்போதும் நான் சொன்னதில்லை
அம்மா உன் கருணை கண்டதால்

பசி இல்லாததுபோல
பாசாங்கு செய்வாள்
பிள்ளையின் பசி போக்க
பட்டினியாய் கிடப்பாள்

கடவுள் இல்லை என்று
எப்போதும் நான் சொன்னதில்லை
அம்மா உன் கருணை கண்டதால்

via  - பசி

கை கடிகாரம்


ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம்.அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார்,அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை.

நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.அவர்களை அழைத்து தன் கைகடிகாரம் தொலைந்துவிட்டது ,அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார்.

சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர் .சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் நான் தேடி தருகிறேன் என்றான்.விவசாயியும் சரி போய் தேடிப்பார் என்றார்.

மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன் எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது என்று கேட்டார்.

நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன்.,எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.

அமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.தினந்தோறும் காலை எழுந்தவுடன் அமைதியாக தியானம் செய்து பாருங்கள், பிறகு உங்கள் மூளை எவ்வளவு கூர்மையாக வேலை செய்கிறது என்பது தெரியும்.

-Ilayaraja Dentist.

பேச்சு சாதுர்யம்

பேச்சு சாதுர்யம்

* பொதுவாகவே பெண்கள் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. ஆனால், பண்டைய இலக்கியங்களில் வரும் பெண்கள் ரத்தினச் சுருக்கமாகப் பேசவும் தெரியும், நீட்டி முழக்கி, சுற்றி வளைத்துப் பேசவும் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு: கண்ணகி தன் கணவன் கொலை செய்யப்பட்டான் என்ற செய்தி கேட்டுக் கொதித்தெழுந்து, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்கச் செல்கிறாள்.

** பாண்டியன், ""நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்... யார் நீ?'' என்று ஒரு கேள்விதான் கேட்டான். அதற்குக் கண்ணகி. ""தேரா மன்னா....'' என்று ஆரம்பித்து, தன் குலம், கோத்திரம் தொடங்கி, ஊழ்வினையை இழுத்து, ""உன்னால் கொலை செய்யப்பட்டவன் மனைவி'' என்று ஆதியோடந்தமாய் ஒரு கேள்விக்கு ஒன்பது பதில்கள் சொல்லி பாண்டியனைத் திணறடித்தாள்!

*** இதற்கு நேர் எதிராக, காட்டில் கந்தர்வ மணம் புரிந்து மனைவியையும், மகனையும் மறந்து நாட்டை ஆளுகின்றான் துஷ்யந்தன். மனைவி சகுந்தலை தன் மகனுடன் அரசன் துஷ்யந்தன் சபைக்குச் செல்கிறாள். அப்போது துஷ்யந்தன், ""பெண்ணே நீ யார்? எதற்காக வந்தாய்? இந்தக் குழந்தை யார்? இதற்கும் உனக்கும் என்னத் தொடர்பு? எனப் பல கேள்விகள் கேட்கிறான். இவ்வளவு கேள்விகளுக்கும் சகுந்தலை சொன்ன ஒரே பதில், ""மகனே... உன் தந்தைக்கு வணக்கம் சொல்'!

**** என்னவொரு நெத்தியடியான பதில்! ஆக, பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா என்ன? அதுவும் எங்கே?, எப்படி?, எந்தளவுக்குப் பேச வேண்டும்? என்று அவர்கள் தெரிந்திருப்பதால்தான் ஆண்கள் ஜம்பம் எக்காலத்திலும் எடுபடுவதில்லை போலும்!


- பேகம் பானு
பேச்சு சாதுர்யம்

* பொதுவாகவே பெண்கள் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. ஆனால், பண்டைய இலக்கியங்களில் வரும் பெண்கள் ரத்தினச் சுருக்கமாகப் பேசவும் தெரியும், நீட்டி முழக்கி, சுற்றி வளைத்துப் பேசவும் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு: கண்ணகி தன் கணவன் கொலை செய்யப்பட்டான் என்ற செய்தி கேட்டுக் கொதித்தெழுந்து, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்கச் செல்கிறாள்.

** பாண்டியன், ""நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்... யார் நீ?'' என்று ஒரு கேள்விதான் கேட்டான். அதற்குக் கண்ணகி. ""தேரா மன்னா....'' என்று ஆரம்பித்து, தன் குலம், கோத்திரம் தொடங்கி, ஊழ்வினையை இழுத்து, ""உன்னால் கொலை செய்யப்பட்டவன் மனைவி'' என்று ஆதியோடந்தமாய் ஒரு கேள்விக்கு ஒன்பது பதில்கள் சொல்லி பாண்டியனைத் திணறடித்தாள்!

*** இதற்கு நேர் எதிராக, காட்டில் கந்தர்வ மணம் புரிந்து மனைவியையும், மகனையும் மறந்து நாட்டை ஆளுகின்றான் துஷ்யந்தன். மனைவி சகுந்தலை தன் மகனுடன் அரசன் துஷ்யந்தன் சபைக்குச் செல்கிறாள். அப்போது துஷ்யந்தன், ""பெண்ணே நீ யார்? எதற்காக வந்தாய்? இந்தக் குழந்தை யார்? இதற்கும் உனக்கும் என்னத் தொடர்பு? எனப் பல கேள்விகள் கேட்கிறான். இவ்வளவு கேள்விகளுக்கும் சகுந்தலை சொன்ன ஒரே பதில், ""மகனே... உன் தந்தைக்கு வணக்கம் சொல்'!

**** என்னவொரு நெத்தியடியான பதில்! ஆக, பெண்களுக்குப் பேசக் கற்றுத்தர வேண்டுமா என்ன? அதுவும் எங்கே?, எப்படி?, எந்தளவுக்குப் பேச வேண்டும்? என்று அவர்கள் தெரிந்திருப்பதால்தான் ஆண்கள் ஜம்பம் எக்காலத்திலும் எடுபடுவதில்லை போலும்!


- பேகம் பானு

செட்டிநாட்டு வீடுகள்















செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!!

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளை பற்றி பார்க்கலாம்.

நாட்டுக்கோட்டை நகரத்தார்களே செட்டியார்கள் எனப்படுவர். அவர்கள் கட்டிய வீடுகளே இன்று சிவகங்கை மாவட்டத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த செட்டிநாட்டு வீடுகள் பெரும்பாலும் பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடி கற்களாலும் கட்டப்பட்டவை. இவர்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டவை. இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே கட்டபட்டவை. இப்போதெல்லாம் இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால் கோடிக்கணக்கில் செலவாகும். அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடித்துவிட்டார்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு கோடிகளில்.....

இந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவை அனைத்தும் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் முன் கதவில் நின்று பார்த்தால் வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின் முன் வாசல் ஒரு தெருவில் இருக்கும் பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால் parallel streets இன் நடுவே இந்த வீடுகள் அமைந்திருக்கும்.

வீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இந்தக் காலத்துக்கேற்ப சொல்லவேண்டும் என்றால் திண்ணை = வரவேற்பரை. இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளையின் அறை, வீட்டிற்கு முன்னால் கேணிகள் ,திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன இந்த வீடுக்ள்.

இந்த கதவை தாண்டிச் சென்றால் வெட்டவெளியான இடம் இருக்கும். இந்த இடத்தைச் சுற்றிலும் பல அறைகள் இருக்கும். இந்த அறைகளை தனது பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தவுடன் பரிசாக கொடுத்துவிடுவார்கள். இப்போது வீட்டையே பரிசாக கொடுக்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது - உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு - சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். அதாம்பா க்ரைண்டர். பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களை சேமிப்பதற்காக! வீடு முழுவதும் சன்னல்களும் தூண்களும் நிறைந்திருக்கும்.

இந்த வீடுகளின் சுவர்கள் முழுவதும் சிறப்பான கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது. இந்த கலவை முட்டை ஓடுகள், எலுமிச்சை சாறு, வாசனை பொருட்கள் போன்ற பலவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இந்த கலவை கொண்டு சுவர்கள் பூசப்படுவதால் வீடு வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டிக்கு ஒப்புமைப் படுத்தலாம். இந்த கலவையைப் பயன்படுத்துவதால் சுவர்கள் பொலிவுடன் விளங்குவதோடு சுத்தப்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கிறது. இந்த வீடுகள் மிக உயரமாகவும் , காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இந்த வீடுகளின் தரைகள் சிமெண்டால் பூசப்பட்டு பின்னர் வண்ணமாக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் தரைகள் ஆத்தங்குடி கற்களால் கட்டப்பட்டவை.

இந்த வீடுகளின் நடுவில் இருக்கும் வெட்டவெளியான இடம் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் வழங்குகிறது. இந்த இடம் மூலம் மழை நீரை சேமிக்கலாம். அதாவது மழை பெய்யும் போது தண்ணீர் இந்த இடத்தில் விழுந்து கொடுக்கப்பட்டிருக்கும் வழியே சென்று சேமிக்கப்படுகிறது. இந்த வழியை மழை பெய்யாத காலங்களில் அடைக்க அதெற்கென்று செதுக்கப்பட்ட கல் உபயோகப்படுத்தப்படுகிறது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை.


அப்படி என்ன இந்த வீடுகளுக்குள் இருக்கும்? அரிய மரச்சாமான்கள், பித்தளைச் சாமான்கள், ஓலைகளால் ஆன கலைப் பொருட்கள் போன்றவை இருக்கும்.. அதற்கும் மேலாக செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு கை பிடிக்கலாம். உணவு வகைகளை பற்றி குறிப்பிடும் போது நொருக்குத் தீனிகளைப் பற்றியும் சொல்ல வேண்டும்.. செட்டிநாட்டுக்கு என்றே நொருக்குத்தீனிகள் இருக்கின்றன, உதாரணமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். உக்காரை , கந்தரப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம் , கவுனியரிசி , பால் பணியாரம் , தேன்குழல் , சீப்பு சீடை, மனகோலம் போன்ற என்னற்றவை இங்கு பிரபலம். சிலவற்றை நாம் அறிந்திருக்கக்கூட முடியாது. இந்த உணவு வகைகள் அனைத்தும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சாப்பிடத் தூண்டுபவை.

பனை ஓலைகளைக் கொண்டு பல வடிவங்களில் பெட்டிகளை கையால் செய்து உபயோகப்படுத்துகின்றனர். இந்த பெட்டிகள் பல வண்ணங்களில் பல வடிவங்களை இருக்கின்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் செய்த எம்ப்ராயடரி இன்று வீடுகளில் காட்சிப் பொருட்களாக விளங்குகிறது. எம்ப்ராயடரி என்றால் தற்போது உள்ளது போல அல்ல! வெறும் x வடிவத்தில் துணி முழுவதையும் வண்ண நூல்களால் நிறப்பி உருவாக்கியுள்ளனர். பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் பெரிது பெரிதாய் நிற்கின்றன் இந்த வீடுகளில்.. மரச் சாமாண்கள் கலை நயத்தோடு சிறிதும் பெரிதுமாக இருக்கின்றன. அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. முன்னாட்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் திருவிழா போல் ஒரு வாரம் நடைபெற்றன என்று கூறுவர், ஆனால் இப்போது வெறும் மூன்று நாட்களே நடைபெறுகின்றன. கீழுள்ள வீடியோவைப் பார்த்து செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்
இந்த வீடுகளில் சில வீடுகள் மற்றுமே சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. நீங்கள் மற்ற வீடுகளை காண வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும். மேலும் சிலவற்றை சுற்றுலாத் தளமாக ஆக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சுற்றுலாத் தளமாக்கப்பட்ட சில வீடுகள்:

1)S.A.R Muthiah house.
2)Muthiah chettiar, raja of chettinad - kanadukathan.
3)Muthiah's brother house - kanadukathan.
 
 
— with Syed Zakir Hussain.

கொடுங்கள்.. பெறுவீர்கள்!....


 
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன.

1) ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

2) அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.


via - Aatika Ashreen

அழிவின் விளிம்பில் ஒரு அற்புதக் குவியல் - பனைமரம்

அழிவின் விளிம்பில் ஒரு அற்புதக் குவியல்
-----------------------------------------------------------

என்னைக் கேட்டால் பனைமரத்தைப் போன்ற அற்புதமான பயனுள்ள மரம் வேறொன்றும் இருக்கமுடியாது. அது நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வரட்சியையும் தாக்குப்பிடித்து மற்ற எல்லா வளங்களும் வற்றி வரண்டுபோன பிறகு கூட மனித இனத்தைக் காப்பாற்றப் பயன்தரக்கூடியது.

அதன் காய்கள் இளமையாக இருக்கும்போது நுங்காக நாம் சுவைத்துச் சாப்பிடப் பயன்படுகிறது. முதிர்ந்து விட்டால் பனம் பழம் மிகவும் சத்துமிகுந்த சதைப்பகுதியைக் கொண்டது. அதனுள்ளிருக்கும் கொட்டைகளை மண்ணுக்குள் இட்டு நீர்விட்டால் அருமையான பனங்கிழங்குகள் கிடைக்கிறது.

பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரைவிடச் சுவையானது என்று வேறு எதைச் சொல்ல முடியும்? அதுமட்டுமல்ல (குடி) மக்களுக்காக தீங்கற்ற மலிவான மதுவையும் தருகிறது. பதநீரைக் காய்ச்சி வெல்லம், கல்கண்டு போன்ற அருமையான உணவுப்பொருட்களைப் பெறுகிறோம்.

பனை நாராலும் பனை ஓலைகளாலும் செய்யக்கூடிய பொருட்களும் அதனால் வாழக்கூடிய மக்களும் ஏராளம் என்பதும் அனைவருக்கும் தெரியுமே! இத்தனைக்கும் மேலாக அது கீழே சாய்ந்து விட்டாலோ அல்லது நாமாகவோ வெட்டிச்சாய்த்தாலோ அதன் முழு மரமுமே அருமையான மரச்சாமான்களாகி வீடுகட்டப் பயன்படுகின்றன.

இத்தனை உபயோகமுள்ள பனைமரங்களை நாம் என்ன செய்திருக்கிறோம் தெரியுமா?

செங்கல் சூளைகளில் இட்டு பெரும்பாலானவற்றை எரித்துவிட்டோம். இன்னும் மீதமிருப்பதும் அழிவின் விளிம்பில் உள்ளது. அற்பக் காசுக்காக நன்றி கொன்ற நாம் பனையை அழித்துவருகிறோம். சில வெள்ளிக் காசுகளுக்காக இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதாஸைப்போல.

இன்னும் ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் நமது நாட்டில் பயிர் செய்யப்படாமல் இருக்கும் மானாவாரி நிலங்களிலும் தரிசுநிலங்களிலும் முழுவதும் பனையைப் பயிர் செய்தோமென்றால் எதிர்காலத்தில் அனைத்து மக்களுக்கும் அதைக் கொண்டே உணவளிக்க முடியும். ( யாரேனும் டாக்டர் பட்டத்துக்காகப் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் இருந்தால் இதை ஆராய்ச்சிக்குரிய பொருளாக எடுத்துக் கொள்ளலாம். நோபல் பரிசைக் கூட வெல்லலாம்! )

இத்தனை பயன் உள்ள பனைமரத்தை இதுகாலமும் அழித்து வந்ததற்கு ஏதேனும் பிராயச்சித்தம் செய்ய விரும்பினால் அரசு உடனே பனைமரத்தைத் தேசியமரமாக அறிவித்து அதை வெட்டுவதைத் தடைசெய்யவேண்டும்.

-Thiru.Subash Krishnasamy
source: http://www.drumsoftruth.com/

நண்பர்கள் இதை விரும்பினால் ஷேர் செய்யுங்கள்.


via - சுபா வள்ளி
அழிவின் விளிம்பில் ஒரு அற்புதக் குவியல்
-----------------------------------------------------------

என்னைக் கேட்டால் பனைமரத்தைப் போன்ற அற்புதமான பயனுள்ள மரம் வேறொன்றும் இருக்கமுடியாது. அது நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வரட்சியையும் தாக்குப்பிடித்து மற்ற எல்லா வளங்களும் வற்றி வரண்டுபோன பிறகு கூட மனித இனத்தைக் காப்பாற்றப் பயன்தரக்கூடியது.

அதன் காய்கள் இளமையாக இருக்கும்போது நுங்காக நாம் சுவைத்துச் சாப்பிடப் பயன்படுகிறது. முதிர்ந்து விட்டால் பனம் பழம் மிகவும் சத்துமிகுந்த சதைப்பகுதியைக் கொண்டது. அதனுள்ளிருக்கும் கொட்டைகளை மண்ணுக்குள் இட்டு நீர்விட்டால் அருமையான பனங்கிழங்குகள் கிடைக்கிறது.

பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரைவிடச் சுவையானது என்று வேறு எதைச் சொல்ல முடியும்? அதுமட்டுமல்ல (குடி) மக்களுக்காக தீங்கற்ற மலிவான மதுவையும் தருகிறது. பதநீரைக் காய்ச்சி வெல்லம், கல்கண்டு போன்ற அருமையான உணவுப்பொருட்களைப் பெறுகிறோம்.

பனை நாராலும் பனை ஓலைகளாலும் செய்யக்கூடிய பொருட்களும் அதனால் வாழக்கூடிய மக்களும் ஏராளம் என்பதும் அனைவருக்கும் தெரியுமே! இத்தனைக்கும் மேலாக அது கீழே சாய்ந்து விட்டாலோ அல்லது நாமாகவோ வெட்டிச்சாய்த்தாலோ அதன் முழு மரமுமே அருமையான மரச்சாமான்களாகி வீடுகட்டப் பயன்படுகின்றன.

இத்தனை உபயோகமுள்ள பனைமரங்களை நாம் என்ன செய்திருக்கிறோம் தெரியுமா? 

செங்கல் சூளைகளில் இட்டு பெரும்பாலானவற்றை எரித்துவிட்டோம். இன்னும் மீதமிருப்பதும் அழிவின் விளிம்பில் உள்ளது. அற்பக் காசுக்காக நன்றி கொன்ற நாம் பனையை அழித்துவருகிறோம். சில வெள்ளிக் காசுகளுக்காக இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதாஸைப்போல.

இன்னும் ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் நமது நாட்டில் பயிர் செய்யப்படாமல் இருக்கும் மானாவாரி நிலங்களிலும் தரிசுநிலங்களிலும் முழுவதும் பனையைப் பயிர் செய்தோமென்றால் எதிர்காலத்தில் அனைத்து மக்களுக்கும் அதைக் கொண்டே உணவளிக்க முடியும். ( யாரேனும் டாக்டர் பட்டத்துக்காகப் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் இருந்தால் இதை ஆராய்ச்சிக்குரிய பொருளாக எடுத்துக் கொள்ளலாம். நோபல் பரிசைக் கூட வெல்லலாம்! )

இத்தனை பயன் உள்ள பனைமரத்தை இதுகாலமும் அழித்து வந்ததற்கு ஏதேனும் பிராயச்சித்தம் செய்ய விரும்பினால் அரசு உடனே பனைமரத்தைத் தேசியமரமாக அறிவித்து அதை வெட்டுவதைத் தடைசெய்யவேண்டும்.

-Thiru.Subash Krishnasamy
source: http://www.drumsoftruth.com/

நண்பர்கள் இதை விரும்பினால் ஷேர் செய்யுங்கள்.


via - சுபா வள்ளி

தாய் - தாய்மை

தன் குழந்தைக்கு எதுவும் வந்துவிட கூடாது
என்று பதறுபவள் தாய் .

எந்த குழந்தைக்கும் எதுவும் வந்துவிட கூடாது
என்று பதறுவது தாய்மை ,

யாரோ சொன்னாங்க !. ஆனாலும் சரி தானே !


via - ரௌத்திரம் பழகு
தன் குழந்தைக்கு எதுவும் வந்துவிட கூடாது
என்று பதறுபவள் தாய் .

எந்த குழந்தைக்கும் எதுவும் வந்துவிட கூடாது
என்று பதறுவது தாய்மை ,

யாரோ சொன்னாங்க !. ஆனாலும் சரி தானே !


via - ரௌத்திரம் பழகு

தமிழக கான்ஸ்டபிளின் நிலை

தமிழக கான்ஸ்டபிளின் நிலை

தமிழக காவல்துறையில் உள்ள கான்ஸ்டபிளின் நிலை இதுதான்.

அரசு வேலை வேண்டும் என்பதற்காக காவல்துறை பணியில் சேர்ந்த காவலரின் நிலையைப் பார்த்தீர்களா... இதற்காகவா மக்களின் வரிப்பணத்தில் இந்த கான்ஸ்டபிளுக்கு சம்பளம் கொடுக்கப் படுகிறது. குனிந்து ஷு லேசை கட்ட முடியாத நபர் எதற்காக காவல்துறைப் பணியில் இருக்கிறார் ? தான் அதிகாரி என்ற ஆணவமல்லாமல் வேறு என்ன இது ?


via - Palaniswamy Palaniswamy
தமிழக கான்ஸ்டபிளின் நிலை

தமிழக காவல்துறையில் உள்ள கான்ஸ்டபிளின் நிலை இதுதான்.

அரசு வேலை வேண்டும் என்பதற்காக காவல்துறை பணியில் சேர்ந்த காவலரின் நிலையைப் பார்த்தீர்களா... இதற்காகவா மக்களின் வரிப்பணத்தில் இந்த கான்ஸ்டபிளுக்கு சம்பளம் கொடுக்கப் படுகிறது. குனிந்து ஷு லேசை கட்ட முடியாத நபர் எதற்காக காவல்துறைப் பணியில் இருக்கிறார் ? தான் அதிகாரி என்ற ஆணவமல்லாமல் வேறு என்ன இது ?


via - Palaniswamy Palaniswamy

"போலீஸ் அம்மா"

அம்மா.

சீனாவில் காவல்துறைப் பெண் அதிகாரி ஒருவருக்கு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணி செய்வதற்கான உத்தரவு வந்தது.

பிறந்த ஆறு மாதம் ஆன தன் குழந்தையைப் பிரிந்து நிவாரணப் பணிக்காகச் சென்றார். அந்த தொலைதூர இடத்தில் பூகம்பத்தால் தாயை இழந்து பசியால் வாடிய குழந்தைகள் ஒன்பது பேருக்கு தாய்ப்பால் ஊட்டிக் காப்பாற்றினார்.

இந்த நெகிழ்வான செயலுக்காக சீன அரசு இவருக்கு முக்கிய அங்கீகாரம் கொடுத்துள்ளது....இன்று மக்களால் "போலீஸ் அம்மா" என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்.

Source: http://www.iamnotthebabysitter.com/police-officer-breastfed-quake/


via - Ilangovan Balakrishnan.

(ஆனந்த விகடன் 02-12-2009 இதழின் 'லஞ்சம் விகடன்' இணைப்பில் இருந்து.)


லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை..?
-----------------------------------------------------

லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம். லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?

ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).

எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.

அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.

செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.

நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.

இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.

சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.

எல்லாம் சரி இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'!

(ஆனந்த விகடன் 02-12-2009 இதழின் 'லஞ்சம் விகடன்' இணைப்பில் இருந்து.)
படித்ததில் பிடித்தது !
===============
" இறக்கும் வரை
காங்கிரஸில் இருப்பேன் என்றாய் ,
நீ இருக்கும் வரைதான்
காங்கிரசே இருந்தது ! "

via Chandran Veerasamy
படித்ததில் பிடித்தது !
===============
" இறக்கும் வரை 
காங்கிரஸில் இருப்பேன் என்றாய் ,
நீ இருக்கும் வரைதான் 
காங்கிரசே இருந்தது ! "

via Chandran Veerasamy

கல்லறையில் உறங்கும் தமிழ் மாணவன் ஜி.யு.போப் பிறந்ததினம் இன்று 24-04-1820,

கல்லறையில் உறங்கும் தமிழ் மாணவன் ஜி.யு.போப் பிறந்ததினம் இன்று 24-04-1820,

40 ஆண்டுகால தமிழ் சேவை,!

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பேரராசியராக பணியற்றியவர்,!

திருக்குறள்,நாலடியார்,
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்,!

புறப்பொருள்,
வெண்பாமாலை,
புறநானுறு,
திருவருட்பயன்,போன்ற நூல்களை புதுபித்தவர்,!

சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்,!

இறப்பிற்கு பிறகு தன் கல்லறையில் தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என எழுதும்படி உயில் எழுதி வைத்தவர்,!

ஆங்கிலம் தான் அறிவு என்று இக்காலத்தில் திரியும் தமிழன் முன்னே 2 நூற்றாண்டிற்கு முன்பே தமிழின் பெருமையறிந்து ஆங்கிலநாடான இங்கிலாந்திலேயே தமிழ் பேராசிரியராக பணியாற்றி,
தமிழன் பலரும் அறிந்திடாத பழந்தமிழ் நூல்களை புதுப்பித்து,
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் முழூவதும் கொண்டு சென்று,
ஆங்கிலயேனாக பிறந்து செந்தமிழ் மீது தீராத தாகங்கொண்டு தமிழராக இன்று கல்லறையில் உறங்கும் தமிழ் மாணவர் ஜி.யு.போப் இன்று ஆங்கில மோகங் கொண்டவனுக்கு ஓர் எடுத்துக்காட்டு!

அத்தமிழ் மாணவனுக்கு இத் தமிழனின் வணக்கங்கள்.


கல்லறையில் உறங்கும் தமிழ் மாணவன் ஜி.யு.போப் பிறந்ததினம் இன்று 24-04-1820,

40 ஆண்டுகால தமிழ் சேவை,!

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பேரராசியராக பணியற்றியவர்,!

திருக்குறள்,நாலடியார்,
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்,!

புறப்பொருள்,
வெண்பாமாலை,
புறநானுறு,
திருவருட்பயன்,போன்ற நூல்களை புதுபித்தவர்,!

சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்,!

இறப்பிற்கு பிறகு தன் கல்லறையில் தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என எழுதும்படி உயில் எழுதி வைத்தவர்,!

ஆங்கிலம் தான் அறிவு என்று இக்காலத்தில் திரியும் தமிழன் முன்னே 2 நூற்றாண்டிற்கு முன்பே தமிழின் பெருமையறிந்து ஆங்கிலநாடான இங்கிலாந்திலேயே தமிழ் பேராசிரியராக பணியாற்றி,
தமிழன் பலரும் அறிந்திடாத பழந்தமிழ் நூல்களை புதுப்பித்து,
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் முழூவதும் கொண்டு சென்று,
ஆங்கிலயேனாக பிறந்து செந்தமிழ் மீது தீராத தாகங்கொண்டு தமிழராக இன்று கல்லறையில் உறங்கும் தமிழ் மாணவர் ஜி.யு.போப் இன்று ஆங்கில மோகங் கொண்டவனுக்கு ஓர் எடுத்துக்காட்டு!

அத்தமிழ் மாணவனுக்கு இத் தமிழனின் 
வணக்கங்கள். 


-கார்த்திக் பாரதி

சனிப்பெயர்ச்சி

புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.


via Mohamed Ali
புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.


via Mohamed Ali
குழந்தைகள்

விளையாட்டுத்தனமாய் போட்டு உடைப்பது

பொம்மைகளை மட்டுமல்ல

சில உண்மைகளையும் தான்

நம் முன்னே..........!


-ரசித்தது
குழந்தைகள் 

விளையாட்டுத்தனமாய் போட்டு உடைப்பது

பொம்மைகளை மட்டுமல்ல 

சில உண்மைகளையும் தான்

நம் முன்னே..........!


-ரசித்தது

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,

அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,

ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது

இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,

உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!!!


via - தமிழ் -கருத்துக்களம்-
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,

அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,

ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது

இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,

உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!!!


via - தமிழ் -கருத்துக்களம்-